• Download mobile app
02 Aug 2026, SundayEdition - 3826
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

சிங்காநல்லூர் ஹவுசிங் யூனிட் மக்கள் வீடுகளை வீட்டு வெளியேற நோட்டீஸ்

September 27, 2017 தண்டோரா குழு

கோவை சிங்காநல்லூர் ஹவுசிங்யூனிட் அடுக்குமாடி குடியிருப்பு பகுதி மக்களை உடனடியாக காலிசெய்யச் சொல்லி வட்டாட்சியர்,ஆர்.டி.ஓ. மற்றும் துணை வட்டாட்சியர் ஆகியோர் போலீஸ் துணையுடன் நோட்டீஸ் கொடுத்தனர்.

இதனிடையே நோட்டீசை வாங்க மறுத்த மக்கள் அதிகாரிகளுடன் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர். இந்நிலையில் சிங்காநல்லூர்எம்.எல்.ஏ.நா.கார்த்திக் நேரில் சென்று அங்கு வசிக்கும் மக்களுக்கு,அதே இடத்தில் வீடுகள் கட்டிக்கொடுக்கும் வரை பாதுகாப்பான மாற்று இடம் வழங்குமாறு சம்பந்தப்பட்ட உயரதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்தார்.

இது குறித்து நா.கார்த்திக் கூறுகையில்,

” மனிதாபிமான அடிப்படையில் அதிகாரிகள் நடந்துகொள்ள வேண்டும். மக்கள் உடனடியாக வீடுகளை எவ்வாறு காலி செய்ய முடியும், அவர்களுக்கு அதிகாரிகள் சரவணம்பட்டி அல்லது உக்கடம் பகுதியில் உள்ள வீட்டு வசதி வாரிய வீடுகளை ஒதுக்கி தர வேண்டும்,” என்றார்.

மேலும் படிக்க