• Download mobile app
13 May 2024, MondayEdition - 3015
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

சாலை விபத்தில் 24 பள்ளி மாணவர்கள் பலி

January 19, 2017 தண்டோரா குழு

உத்தரப் பிரதேச மாநிலத்தில் வியாழக்கிழமை (ஜனவரி 19) நடந்த சாலை விபத்தில் 24 பள்ளி மாணவர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.

இது குறித்து லக்னோ காவல்துறை அதிகாரி ஒருவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

உத்தரப் பிரதேசம் மாநிலத்தில் உள்ள இதா மாவட்டத்தில் ஜே.எஸ். பொதுப்பள்ளி அமைந்துள்ளது. அந்த பள்ளி வாகனத்தில் 6௦ மாணவ மாணவிகள் பயணம் செய்தனர். அப்பள்ளி வாகனத்தின் மீது வேகமாக வந்த சரக்கு வண்டி மோதியதில் 24 பள்ளி மாணவர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். மற்றவர்கள் காயமடைந்துள்ளனர். இந்த விபத்திற்கு மூடுபனியே முக்கிய காரணம்.

மோசமான வானிலை காரணமாக அம்மாநிலத்தின் அனைத்துப் பள்ளிகளும் வெள்ளிக்கிழமை வரை மூடப்பட்டுள்ளன. ஆனால், ஜே.எஸ். பொதுப்பள்ளி மட்டும் இயங்கியுள்ளது. எனவே, அது குறித்து விசாரணை மேற்கொண்டுள்ளோம்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

இந்த சம்பவம் குறித்து பிரதமர் தனது ட்விட்டரில், “உத்தரப் பிரதேசம் மாநிலத்தின் இதா மாவட்டத்தில் நடந்த இச்சம்பவம் எனக்கு அதிக வேதனையைத் தருகிறது. குழந்தைகளை இழந்த குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த சம்பவத்தில் காயமடைந்த குழந்தைகள் விரைவில் குணமடைய இறைவனை பிராத்தனை செய்கிறேன்” என்றார்.

மேலும் படிக்க