• Download mobile app
31 May 2026, SundayEdition - 3763
FLASH NEWS
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு மகளிர் சுயஉதவி குழுக்களுக்கு கடனுதவி வழங்கும் விழா

March 8, 2024 தண்டோரா குழு

சர்வதேச மகளிர் தினத்தை கொண்டாடும் விதமாக பேங்க் ஆப் இந்தியா கோயமுத்தூர் மண்டலம் சார்பாக 6500க்கும் மேற்பட்ட பெண் தொழில் முனைவோர் மற்றும் மகளிர் சுயஉதவி குழுக்களுக்கு பல்வேறு திட்டங்களில் கடன் உதவி வழங்கப்பட்டது.

இந்தியா மட்டுமின்றி உலகம் முழுவதும் 5500க்கும் மேற்பட்ட கிளைகளை கொண்ட சிறந்த பொதுத்துறை வங்கியாக பேங்க் ஆப் இந்தியா செயல்பட்டு வருகிறது.

இந்நிலையில் சர்வதேச மகளிர் தினத்தை கொண்டாடும் விதமாக பேங்க் ஆப் இந்தியா கோயமுத்தூர் மண்டலம் சார்பாக பெண் வாடிக்கையாளர்களை கவுரவிக்கும் விழா கோவை பாரதியார் பல்கலை கழக வளாக அரங்கில் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில்,பேங்க் ஆப் இந்தியா வங்கியின்,பொது மேலாளர் முகேஷ் சர்மா, (தெற்கு, சென்னை) பாரதியார் பல்கலைக்கழக துணைவேந்தர் கவுன்சில் தலைவர் லவ்லினா லிட்டில், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் உதவி திட்ட அலுவலர் அசோகன், பேங்க் ஆப் இந்தியா கோயம்புத்தூர் மண்டல மேலாளர் அஜெயா தாக்கூர் மற்றும் முக்கிய பிர முகர்கள் கலந்து கொண்டனர்.

மேலும் படிக்க