• Download mobile app
15 May 2024, WednesdayEdition - 3017
FLASH NEWS
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

சமாஜ்வாதி கட்சியை இரண்டாக உடைய விடமாட்டேன்

January 11, 2017 தண்டோரா குழு

சமாஜ்வாதி கட்சியை இரண்டாக உடைய விடமாட்டேன் , தொண்டர்கள் கவலை அடையத் தேவையில்லை என அக்கட்சியின் தேசியத் தலைவரான முலாயம் சிங் யாதவ் பேசியுள்ளார்.

லக்னோவில் உள்ள சமாஜ்வாதி கட்சி தலைமையகத்தில் தொண்டர்கள் மத்தியில் முலாயம் சிங் யாதவ் புதன்கிழமை பேசியதாவது:

“கட்சியில் ஒற்றுமை வேண்டும் என்று நான் விரும்புகிறேன். புதிதாக எந்தக் கட்சியையும் தொடங்கவும் மாட்டேன், சின்னத்தையும் மாற்ற மாட்டேன்.

அகில பாரதிய சமாஜ்வாதி கட்சியை யார் உருவாக்கினார்கள் என்பதையும் நான் அறிவேன். மோட்டர் சைக்கிள் தேர்தல் சின்னத்தை விரும்புவர்கள் யார் என்பதையும் அறிவேன். அகிலேஷுக்காக நான் அனைத்தையும் கொடுத்துவிட்டேன். என்னிடம் வேறு எதுவும் இல்லை. தொண்டர்களை மட்டுமே உடன் வைத்துள்ளேன். எமெர்ஜன்சி காலக்கட்டங்களில் நான் சமாஜ்வாதியை அமைத்தேன் அப்போது அகிலேஷுக்கு 2 வயது.

அகிலேஷ் தற்போது முதல்வராக உள்ளார். அடுத்த முறையும் அவரே முதல்வராக பதவியேற்பார். மோசமான நபர்களை அகிலேஷ் ஏன் பின் தொடர வேண்டும். சர்ச்சைக்குள் தன்னிச்சையாக சென்று ஏன் சிக்க வேண்டும்? என்ன நடந்தாலும் கட்சிக்குள் ஒற்றுமை இருக்க வேண்டும் என்பது தான் எனது விருப்பம்.

சமாஜ்வாதியின் வளர்ச்சிக்காக சிவ்பால்(அகிலேஷ் சித்தப்பா – முன்னாள் மாநில தலைவர் ) கடுமையாக பாடுபட்டவர். அவசரநிலை காலத்தில் அவர் கட்சிக்காக உழைத்திருக்கிறார். அவரை எப்படி கட்சியில் இருந்து நீக்க முடியும். கட்சிக்குள் ஏற்பட்டிருக்கும் தற்போதைய நிலையை கண்டு தொண்டர்கள் மிகுந்த கவலை அடைந்துள்ளனர். சமாஜ்வாதி போராட்டத்தில் இருந்து தான் பிறந்தது. எனவே தொண்டர்கள் கவலை அடையத் தேவையில்லை. கட்சியின் ஒற்றுமைக்கும் எந்த பங்கமும் ஏற்படாது. ஒருபோதும் கட்சியை இரண்டாக உடைய விட மாட்டேன்.”

இவ்வாறு அவர் பேசினார்.

மேலும் படிக்க