• Download mobile app
30 Aug 2026, SundayEdition - 3854
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

சசிகலா விவகாரம்: பாகுபலியை மிஞ்சும் அளவிற்கு கிராபிக்ஸ் –புகழேந்தி குற்றச்சாட்டு

July 18, 2017 தண்டோரா குழு

சசிகலா போட்டோ, வீடியோ அனைத்தும் பாகுபலிபட திரைப்படம் போல் கிராபிக்ஸ் செய்யப்பட்டுள்ளது என்று தினகரன் அணியில் உள்ள புகழேந்தி குற்றம்சாட்டியுள்ளார்.

பெங்களூரு பரப்பன அஹ்ரஹார சிறையில் இருக்கும் சசிகலா தொடர்பாக வீடியோ மற்றும் புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் பரவி வருகிறது.இந்நிலையில், சென்னை அடையாறில் உள்ள டிடிவி தினகரனை சந்தித்து புகழேந்தி பேசினார். பின்னர்,வெளியே வந்த அவர் செய்தியாளர்களிடம் பேசினார்.

அப்போது பேசிய அவர்,

சசிகலா சிறையில் எந்த சலுகைகளையும் அனுபவிக்கவில்லை. தனக்கு அளிக்கப்பட்ட 2 மெமோக்களில் இருந்து தப்பிக்கவே டிஐஜி ரூபா சசிகலாவின் பெயரை தவறாக பயன்படுத்துகிறார்.நாடு முழுவதும் தான் தெரிய வேண்டும் என்பதற்காக சசிகலாவின் பெயரை ரூபா பயன்படுத்தினாரா என தெரியவில்லை.

இந்தப் புகைப்படத்திற்கும் அவருக்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை சட்டப்படி சிறையில் என்ன கொடுக்கப்பட்டுள்ளதோ அது தவிர சசிகலாவிற்கு கூடுதலாக ஒன்றும் கொடுக்கப்படவில்லை. அப்புறம் எப்படி அவர் அங்கு சமைக்க முடியும்.

சசிகலா போட்டோ, வீடியோ அனைத்தும் பாகுபலிபட திரைப்படத்தை மிஞ்சும் அளவிற்கு கிராபிக்ஸ் செய்யப்பட்டுள்ளது என்றார்.

மேலும், சசிகலா தொடர்பான வீடியோவை கொண்டு வாருங்கள். அதனைப் பொய் என்பதை நான் நிரூபிக்கின்றேன். அந்த வீடியோ எங்கிருந்து எடுக்கப்பட்டது என்று எனக்கு தெரிய வேண்டும்.

பரப்பன அக்ரஹாரா சிறை 40 ஏக்கர் பரப்பளவு கொண்டது. இந்த இடத்தில் எப்படி வீடியோ எடுக்கப்பட்டது என்று தெரிய வேண்டும் எனக் கூறினார்.

மேலும் படிக்க