• Download mobile app
17 May 2024, FridayEdition - 3019
FLASH NEWS
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணன் மகளிர் கல்லூரியில் முத்தமிழ் மேடை நாடக பயிலரங்கம்

January 4, 2017 தண்டோரா குழு

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரியில் தமிழ்த் துறையின் தமிழ் இலக்கியப் பேரவை சார்பில் முத்தமிழ் மேடை நாடக பயிலரங்கம் புதனன்று நடைபெற்றது.

இந்நிகழ்ச்சிக்கு அக்கல்லூரியின் முதல்வர் முனைவர் கி. சித்ரா தலைமை வகிக்க தமிழ்த் துறை தலைவர் கு. பாக்கியம் வரவேற்புரை ஆற்றினார். நிகழ்ச்சியில் பி.எஸ்.ஜி. கலை அறிவியல் கல்லூரியின் தமிழ்த் துறை பேராசிரியர் முனைவர் ராம்ராஜ் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு “நடிப்புக் கலை” என்ற தலைப்பில் சிறப்புரை ஆற்றினார்.

ராம்ராஜ் பேசுகையில், “தமிழின் தொன்மையான கலை வடிவமான கூத்துக் கலையிலிருந்துதான் இப்போதிருக்கும் நவீன நாடகங்கள் தோன்றின. சங்க கால நாடக வகைகளில் பெண்கள் நடித்து வந்ததனர். ஆனால், இடைக்காலத்தில் ஆண்களே பெண் வேடம் அணிந்து நடித்ததாகவும் கூறினார்.

மேலும், 19ம் நூற்றாண்டிற்குப் பின்னர் தான் பாலாம்பாள், பாலாமணி போன்ற பெண் கலைஞர்கள் நடிக்கத் தொடங்கினர்” என்று கூறினார்.

நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக மாணவ நாடகக் குழுவினர் சார்பில் தமிழச்சி தங்கபாண்டியன் எழுதிய “கூந்தல் கனவுகள்” என்ற நாவலை அடிப்படையாகக் கொண்ட நாடகம் அரங்கேற்றப்பட்டது. அந்த நாடகம் பெண்களுக்கு எதிராக நடக்கும் வன்முறைகளையும், இல்லத்தரசிகளின் துயரங்களையும் மையமாகக் கொண்டு வடிவமைக்கப்பட்டது. இந்த நாடகத்தை நடத்தி, அதன்மூலம் மாணவியருக்கு நேரடி செயல்முறைப் பயிற்சி அளிக்கப்பட்டது.

மேலும் படிக்க