• Download mobile app
01 Jun 2026, MondayEdition - 3764
FLASH NEWS
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவை மாநகர காவல் துறையில் புதிய ஆக்டோபஸ் செயலி அறிமுகம் !

May 28, 2023 தண்டோரா குழு

கோவை மாநகர காவல் துறையின் சிறப்பு நுண்ணறிவுப்பிரிவு/ நுண்ணறிவுப்பிரிவு ஆகியவற்றின் மூலம் களத்தில் சேகரிக்கப்படும் தகவல்களை ஒருங்கிணைத்து உடனுக்குடன் காவல் உயர் அதிகாரிகளுக்கு பரிமாற்றம் செய்யவும்,தகவல்களை ஒன்றிணைத்து ,பகுப்பாயந்து,சட்டம் ஒழுங்கை பாதிக்கக்கூடிய பொது அமைதியை பாதிக்கக்கூடிய எவ்வித அசம்பாவித சம்பவமும் நடைபெறாமல் இருக்க தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை
மேற்கொள்ளவும்,நுண்ணறிவுப்பிரிவின் அலுவலக பயன்பாட்டிற்கு தேவையான ஒரு புதிய மென்பொருள் மற்றும் அலைபேசி செயலி ஆகியவற்றை உருவாக்கவும் வேண்டி கோவை மாநகர காவல் ஆணையர் V.பாலகிருஷ்ணன் , அறிவுரையின்படி கோவை மாநகரம் , சரவணம்பட்டியில் இயங்கி வரும் KG Invicta Services ( KGiS ) நிறுவனம் மூலமாக ஆக்டோபஸ் ( Octopus ) என்ற மென்பொருள் உருவாக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில்,கோவை வந்த தமிழக டிஜிபி C. சைலேந்திரபாபு கோவை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் மேற்படி ஆக்டோபஸ் ( Octopus)மென்பொருளின் சின்னத்தை (Logo ) வெளியிட்டார்.

இந்நிகழ்ச்சியில் கோவை மாநகர காவல் ஆணையர் V. பாலகிருஷ்ணன் ,ஜெயமுரளி பாலகுருசுவாமி,தலைமை நிர்வாக இயக்குநர் ( CEO ) , KGiS ,சந்தோஷ் சதாசிவன்,இயக்குநர் , KGiS மற்றும் கோவை மாநகர மற்றும் மாவட்ட காவல் உயர் அதிகாரிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இம்மென்பொருள் செயல்படும் விதம் குறித்து காவல்துறை இயக்குநர் அவர்கள் கேட்டறிந்து , ஆலோசனைகளை வழங்கினார்.மேற்படி மென்பொருளானது ஒரு முன்னோடி திட்டமாக கோவை மாநகர காவல் துறையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.இம்மென்பொருள் மற்றும் செயலி மேம்படுத்தப்பட்டு எதிர்வரும் காலங்களில் அனைத்து மாவட்டங்களுக்கும் விரிவுப்படுத்தபபடும் வாய்ப்புள்ளது.

மேலும் படிக்க