• Download mobile app
15 May 2024, WednesdayEdition - 3017
FLASH NEWS
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவை மாநகராட்சி கமிஷனர் ஜெர்மனி செல்கிறார்

September 25, 2023 தண்டோரா குழு

ஜெர்மன் நாட்டின் ஹில்டிஷைம் நகரில் வரும் 27 மற்றும் 28ம் தேதிகளில் நடைபெறும் ஜெர்மன் மற்றும் ஆசிய நகராட்சிகளுக்கான நீர் மேலாண்மை சம்பந்தமான கருத்தரங்கில் கோவை மாநகராட்சி ஆணையாளர் மு.பிரதாப் பங்கேற்க உள்ளார்.

கோவை மாநகரம் மற்றும் ஜெர்மனியிலுள்ள எஸ்லிங்கன் நகருக்கும் 2016 முதல் புரிந்துணர்வு ஒப்பந்தம் உள்ளது. அதன்படி இரு நகரங்களும் கலாச்சாரம், தொழில்நுட்ப, அறிவியல் உள்ளிட்ட துறைகளில் பரிமாற்றம் செய்ய வழிவகை செய்யப்பட்டுள்ளது.தற்போது ஜெர்மனி நாட்டில் ஹில்டிஷைம் என்ற நகரில் ஆசிய நகராட்சிகளுக்கான நீர் மேலாண்மை சம்பந்தமான கருத்தரங்கம் செப்டம்பர் 27 மற்றும் 28-ம் தேதிகளில் நடைபெறவுள்ளது.

இக்கருத்தரங்கில் பங்கேற்க கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் பிரதாப் ஜெர்மன் நாட்டிற்கு செல்கிறார். வருகின்ற செப்டம்பர் 27 முதல் அக்டோபர் 1ம் தேதி வரை ஜெர்மனி நாட்டிற்கு சென்று வர தமிழ்நாடு அரசு அனுமதி அளித்துள்ளது.

மேலும் படிக்க