• Download mobile app
24 May 2026, SundayEdition - 3756
FLASH NEWS
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவை மணியகாரம்பாளையம் 19வது வார்டு பகுதி மகளிரணி மற்றும் தொண்டரணி சார்பில் கனிமொழி பிறந்தநாள் கொண்டாட்டம்

January 5, 2026 தண்டோரா குழு

கோவை மணியகாரம்பாளையம் 19வது வார்டு பகுதி மகளிரணி மற்றும் தொண்டரணி சார்பில் திமுக கழக துணை பொதுச்செயலாளர் எம்.பி கனிமொழி கருணாநிதி அவர்களின் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.

கோவை மாநகர் வடக்கு மாவட்டம் திமுக சார்பில் கோவை மணியகாரம்பாளையம் பகுதி 19வது வார்டில் பகுதி கழகச் செயலாளர் அஞ்சுகம் பழனியப்பன், வட்டக் கழக செயலாளர் குமார் ஆகியோரின் ஏற்பாட்டில் மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் துரை பிரிவின் குமார் மற்றும் மாவட்ட மகளிர் அணி துணை அமைப்பாளர் ஜானகி ஸ்டாலின் சம்பத், மாவட்ட தொண்டரணி துணை அமைப்பாளர் ஜோதி ஆகியோரின் முன்னிலையில் திமுக கழக துணை பொதுச்செயலாளர் மற்றும் தூத்துக்குடி எம்பி கனிமொழி கருணாநிதி அவர்களின் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி சிறப்பாக கொண்டாடப்பட்டது.

இதில், பி.எல்.ஏ 2 நிர்வாகிகள் சாந்தி, டேவிட், ஜேக்கப், ரங்கசாமி, பகுதி கழக மகளிர் அணி அமைப்பாளர் கவிதா, தொண்டரணி அமைப்பாளர் ரஷீதா பேகம் மற்றும் துணை அமைப்பாளர்கள், பகுதி தொண்டர் அணி, மகளிர் அணி துணை அமைப்பாளர் மற்றும் மகளிர் அணி நிர்வாகிகள் பி.எல். ஏ 2 நிர்வாகிகள் கழக முன்னோடிகள் கலந்து கொண்டனர்.

மேலும் படிக்க