• Download mobile app
29 Apr 2024, MondayEdition - 3001
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவை துடியலூரில் நடைபெற்ற கண் பார்வையற்ற பெண்களுக்கான கிரிக்கெட் போட்டி

March 11, 2024 தண்டோரா குழு

கண் பார்வையற்ற பெண்களுக்கான கிரிக்கெட் போட்டி கோவை துடியலூரில் நடைபெற்றது.

இப்போட்டியில் தமிழ்நாடு அணியுடன் கேரளா அணி மோதியது.டாஸ் வென்ற தமிழ்நாடு அணி பீல்டிங்கை தேர்வு செய்தது.முதலில் பேட்டிங் செய்த கேரளா அணியினர் 10 ஓவரில் 1 விக்கெட் இழப்பிற்கு 87 ரன்கள் எடுத்தனர்.இந்த அணி சார்பாக விளையாடிய ஜான்ஷீலா அதிகபட்சமாக 40 ரன்கள் எடுத்தார்.

தமிழ்நாடு அணி சார்பாக பந்து வீசிய அம்மு 1 விக்கெட்டை வீழ்த்தினார்.இதனைத் தொடர்ந்து பேடிங் செய்த தமிழ்நாடு அணி 10 ஓவரில் 3 விக்கெட் இழப்பிற்கு 69 ரன்கள் மட்டுமே எடுத்து தோழ்வியடைந்தது. சிபிஇ பிட்ச் பர்னர்ஸ் ஸ்போர்ட்ஸ் பவுண்டேஷன் சார்பாக நடந்த இப்போட்டியில் வெற்றி பெற்ற கேரள அணிக்கு ரொக்கப்பரிசு ரூ.25 ஆயிரமும், தமிழ்நாடு அணிக்கு ரூ.15 ஆயிரமும் வழங்கப்பட்டது.

மேலும் படிக்க