• Download mobile app
18 Apr 2024, ThursdayEdition - 2990
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவை இரத்தினம் தொழில்நுட்ப வளாகத்தில் ஜி20 -ன் உடைய தொழில் முனைவோர் 20 எக்ஸ் எனும் மாநாடு

April 29, 2023 தண்டோரா குழு

மத்திய அரசின் ஜி20 -ன் உடைய தொழில் முனைவோர் 20 எக்ஸ் எனும் மாநாடு கோயம்புத்தூரில் இரத்தினம் தொழில்நுட்ப வளாகத்தில் ஏஐசி ரைஸால் நடத்தப்பட்டது.

இந்நிகழ்வில் மத்திய மாநில அரசுகளின் முக்கிய அதிகாரிகள், 20க்கும் மேற்பட்ட முதலீட்டாளர்கள் மற்றும் 1000 மேற்பட்ட தொழில் முனைவோர்கள் உட்பட இந்தியாவின் தொழில் முனைவோர் சூழலின் முக்கிய பிரமுகர்கள் பலர் கலந்து கொண்டனர்.

ஏஐசி ரைஸின் துணைத் தலைவர் டாக்டர். நாகராஜ் பாலகிருஷ்ணன் வரவேற்புரையுடன் நிகழ்ச்சி தொடங்கியது. மேலும் இந்நிகழ்வில் ஏஐசி ரைஸ் மூலமாக பல்வேறு கல்லூரிகளில் நடத்தப்பட்ட ஸ்மார்ட் மைன்ட் ஹேக்கதோன் மற்றும் பள்ளி மாணவர்களுக்கான சி.இ.ஒ ஜுனியர் எனும் போட்டிகளின் இறுதி சுற்றுகள் மற்றும் பரிசுகள் வழங்கப்பட்டன.

மேலும் ஸ்டார்அப் 20 எக்ஸ் எனும் நிகழ்வின் ஒரு பகுதியாக நடைபெற்ற ஸ்டார்அப் 20 எக்ஸ் ஸ்பாட் லைட்-ல் நடிகர் மற்றும் தொகுப்பாளர் திரு. கோபிநாத், பயோஃபியுல் -ன் தலைமை நிர்வாக அதிகாரி திரு. கிஷன் கருணாகரன், விட்டி வைஸ் -ன் தலைமை நிர்வாக தொலைநோக்க அதிகாரி திருமதி. சன்மதி கார்த்திக், கோவை பி.ஸ்.ஃப் -ன் நிறுவனர் திருமதி. அனுபா ஆகியோர் தங்களுடைய கருத்துக்கள் மற்றும் அறிவுரைகளை புது தொழில் முனைவோர்களுக்கு வழங்கினர்.

மேலும் தொழில் முறை வல்லுநர்கள் மற்றும் நிபுணர்களின் கருத்துரையாடலில் பாலிசி பஜாரின் தலைவர் ராஜீவ் குமார் குப்தா, நிதி ஆயோக் -ன் இயக்குநர் ரோஹித் குப்தா, டிலாய்ட் -ன் கூட்டாளர் . கல்பனா ஜெய்ன் மற்றும் ஸ்டார்ட்அப் தமிழ்நாடு -ன் மிஷன் இயக்குநர் சிவராஜா ராமநாதன், கோயம்புத்தூரின் ஸ்மார்ட் சிட்டி கமிஷ்னர் பிரதாப், டாசால்ட் சிஸ்டம்ஸ் -ன் உலகளாவிய விவகாரங்களின் இயக்குநர் ராஜீவ் ஆரமடகா ஆகியோர் உட்பட பலர் உரையாடினர்.

மேலும் இந்நிகழ்வில் ஏஐசி ரைஸின் தலைமை நிர்வாக அதிகாரி டாக்டர். மதன் ஏ செந்தில் ஆகியோர் தலைமை தாங்கினர்.

மேலும் படிக்க