• Download mobile app
16 Jul 2026, ThursdayEdition - 3809
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவை அதிமுக தலைமை அலுவகத்தை முற்றுகையிட முயன்றோர் கைது

June 6, 2017 தண்டோரா குழு

மாட்டிறைச்சி விவகாரத்தில் கோவையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தை முற்றுகையிட முயன்ற அடக்குமுறைக்கு எதிரான கூட்டமைப்பினர் 17 பேரை போலீசார் கைது செய்தனர்.

திருமுருகன் காந்தி மீது போடப்பட்ட வழக்கைத் திரும்பப் பெற வேண்டும்.மாட்டிறைச்சி மீதான தடையை நீக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோவை அதிமுக தலைமை அலுவலகமான இதய தெய்வம் மாளிகையை அடக்குமுறைக்கு எதிரான கூட்டமைப்பினர் முற்றுகையிட்டனர்.

இது குறித்து அவர்கள் கூறும்போது,

சென்னையில் இனப்படுகொலைக்கு எதிராக நடைபெற்ற நினைவேந்தல் நிகழ்ச்சியில் பங்கேற்ற திருமுருகன், இளமாறன், டைசன், அருண் ஆகியோர் கைது செய்யப்பட்டது. வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. ஆகவே, அவர்கள் மீது போடப்பட்ட வழக்கைத் திரும்பப் பெற வேண்டும். மாட்டிறைச்சி மீதான தடையை நீக்க வேண்டும் என்றனர்.

இந்த முற்றுகை போராட்டத்தில் ஆதித்தமிழர் கட்சி மாநிலத் தலைவர் வெண்மணி உள்ளிட்ட 17 பேரை போலீசார் கைதுசெய்தனர். இந்தப் போராட்டம் காரணமாக அதிமுக தலைமை அலுவலகம் முன்பாக சில மணி நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் படிக்க