• Download mobile app
31 May 2026, SundayEdition - 3763
FLASH NEWS
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் 2 வயது பெண் குழந்தையை பாலியல் ரீதியாக துன்புறுத்திய தந்தை கைது

July 31, 2023 தண்டோரா குழு

கோவையில் 2 வயது பெண் குழந்தையை பாலியல் ரீதியாக துன்புறுத்திய தந்தையை போலீசார் கைது செய்தனர்.

கோவையை சேர்ந்தவர் 29 வயது இளைஞர்.இவருக்கு திருமணம் ஆகி இரண்டு வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது.இதனிடையே நேற்று முன் தினம் பெண் குழந்தையின் பிறப்புறுப்பில் ரத்தம்அரசு கசிவதை அவரது தாய் பார்த்துள்ளார்.தொடர்ந்து அவரை கோவை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார்.

அங்கு குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள் குழந்தை பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டது தெரியவந்தது.இது தொடர்பான புகாரின் பேரில் போத்தனூர் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்தனர்.விசாரணையில் குழந்தையின் தந்தையே குழந்தைக்கு பாலியல் துன்புறுத்தல் கொடுத்தது தெரியவந்தது.

இதனையடுத்து பெற்ற குழந்தையையே பாலியல் துன்புறுத்திய தந்தையை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.இரண்டு வயது பெண் குழந்தைக்கு தந்தையே பாலியல் ரீதியாக துன்புறுத்திய சம்பவம் கோவையில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் படிக்க