• Download mobile app
21 Aug 2026, FridayEdition - 3845
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் தடை செய்யப்பட்ட 300 கிலோ குட்கா பொருட்கள் பறிமுதல்

November 12, 2018 தண்டோரா குழு

கோவை தாமஸ் வீதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த தடை செய்யப்பட்ட 300 கிலோ குட்கா பொருட்களை உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

கோவை தாமஸ் வீதி அடுத்த பொரிக்கார சந்து பகுதியில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட பான்பராக் மற்றும் குட்கா பொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக உணவு பாதுகாப்பு துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதன்பேரில் கோவை மாவட்ட உணவு பாதுகாப்பு துறை நியமன அலுவலர் விஜயலலிதாம்பிகை தலைமையிலான குழுவினர் சோதனை மேற்கொண்டனர். அதில் அப்பகுதியில் வசித்து வரும் வடமாநிலத்தை சேர்ந்த வாகாராம் என்பவருக்கு சொந்தமான
குடோனுக்கு சீல் வைத்தனர்.

இதனைத்தொடர்ந்து குடோனை திறந்து அங்கு பதுக்கி வைக்கப்பட்டிருந்த சுமார் 300 கிலோ எடையிலான பான்பராக், குட்கா மற்றும் புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர்.மேலும் குடோன் உரிமையாளரான வாகராம் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். அப்போது பறிமுதல் செய்யப்பட்ட பொருட்கள் தனது பொருட்கள் இல்லை எனவும் குடோனை வேறு ஒருவருக்கு வாடகைக்கு விட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். ஆனால் வாகாராம் ஏற்கனவே மீது குட்கா பொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டதாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தொடர்ந்து இதேபோல் பதுக்கலில் ஈடுபட்டு வரும் அவர் மீது சட்டப்படியான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் உணவு பாதுகாப்பு துறை அதிகாரி விஜயலலிதாம்பிகை தெரிவித்தார்.

மேலும் படிக்க