• Download mobile app
25 Apr 2024, ThursdayEdition - 2997
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவையில் உயர்ரக போதை பொருள் விற்பனை செய்த கேரளா வாலிபர் சுற்றி வளைத்து கைது

May 3, 2023 தண்டோரா குழு

கோவை துடியலூர் அருகே வெள்ளகிணர் பகுதியில் உயர் ரக போதை பொருள் விற்பனைக்கு வைத்திருப்பதாக கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் தனிப்படை காவல் உதவி ஆய்வாளர் மற்றும் போலீஸார் விரைந்து சென்று சோதனை மேற்கொண்டனர்.

அப்போது உயர் ரக போதை பொருளான மெத்தபெட்டமைன் (METHAMPHETAMINE)-ஐ வைத்திருந்த கேரளா மாநிலத்தை சேர்ந்த அகில் (26) என்பவரை சுற்றி வளைத்து போலீஸார் கைது செய்தனர். அவரிடமிருந்து ரூ.16000 மதிப்புள்ள 6 கிராம் எடையுள்ள உயர்ரக போதை பொருளான மெத்தபெட்டமைன்-ஐ பறிமுதல் செய்தனர்.

கடந்த ஜனவரி 1ம் தேதி முதல் தற்போது வரை கோவை மாவட்ட போலீஸாரால் நடத்தப்பட்ட அதிரடி சோதனைகளில் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்ட 207 நபர்கள் மீது 510 வழக்குகள் பதிவு செய்து அவர்களிடமிருந்து சுமார் 433.131 கிலோ கிராம் எடையுள்ள கஞ்சா மற்றும் கஞ்சா சாக்லேட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. மேலும் உயர்ரக போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்ட 5 நபர்கள் மீது 3 வழக்குகள் பதிவு செய்து அவர்களிடமிருந்து சுமார் 23 கிராம் எடையுள்ள உயர் ரக போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இந்த தகவலை மாவட்ட கண்காணிப்பாளர் அலுவலக போலீஸார் தெரிவித்தனர்.

மேலும் படிக்க