• Download mobile app
03 May 2024, FridayEdition - 3005
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோயம்புத்தூர் லாரி உரிமையாளர்கள் வரும் 9ம் தேதி வேலை நிறுத்தம் அறிவிப்பு

October 26, 2023 தண்டோரா குழு

தமிழக அரசு கனரக லாரிகளுக்கு உயர்த்தியுள்ள சாலை வரியை ரத்து செய்ய வலியுறுத்தி ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட கோயமுத்தூர் லாரி உரிமையாளர்கள் சங்கத்தினர் முடிவு செய்துள்ளனர்.

கோயம்புத்தூர் லாரி உரிமையாளர்கள் சங்கத் தலைவர் முருகேசன் செயலாளர் வெங்கடேஷ் ஆகியோர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியதாவது.தமிழகத்தில் ஏற்கனவே இயங்கி வந்த 4.50 லட்சம் லாரிகள் கொரோனா தொற்று காலத்திற்கு பின் தொழில் நெருக்கடி மற்றும் உதிரி பாகங்கள் விலை உயர்வு சுங்க கட்டண அதிகரித்தல் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் தற்போது 2. 50 லட்சம் எண்ணிக்கையான லாரிகள் மட்டும் இயங்குகின்றன.

லாரி தொழிலில் நாளுக்கு நாள் அழிவை சந்தித்து வருகின்றன. இந்த நிலையில் லாரிகளுக்கு பசுமை வழியாக 500 ரூபாயிலிருந்து 750 ரூபாயாக உயர்த்தி உள்ளது.அத்துடன் லாரிகளுக்கான காலாண்டு வரியில் 40 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது.

ஆன்லைனில் அபராதம் தங்கள் விதிப்பதை ரத்து செய்யக் கோரியும் மாநில அரசு தெரிவித்துள்ள 32 கால பதிவான சுங்க சாவடிகளை அகற்றையும் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நவம்பர் 9ஆம் தேதி காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை லாரிகளை இயக்காமல் அடையாள வேலை நிறுத்தம் செய்ய முடிவு செய்துள்ளோம். என்று இந்த அறிக்கையில் கூறியுள்ளனர்.

மேலும் படிக்க