• Download mobile app
05 May 2024, SundayEdition - 3007
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோட்டா கோல்டு நிறுவனத்தின் 100வது ஆண்டு விழா – நூறு வயது மூத்தவர்களுக்கு வெள்ளி நாணயம் பரிசு

January 7, 2024 தண்டோரா குழு

கோட்டா கோல்டு நூறாவது ஆண்டு விழாவை கொண்டாடும் வகையில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை கோவை நகர மக்களுக்கு செய்திட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக செந்தில்குமார் கவிதா தம்பதியினர் தெரிவித்தனர்.

கோவை கிராஸ்கட் ரோட்டில் உள்ள
கோட்டா கோல்ட் நிறுவனத்தின்நூற்றாண்டு முன்னிட்டு (1924–2024) நவ இந்தியா, வாகமான் கோட்டா இடத்தில் இன்று.7/1/24 மாலை பல்வேறு சுவையான நிகழ்வுகளுடன் நடைபெற உள்ளது.

இந்த நூற்றாண்டை பெருமைக்கு வனிதா மோகன் (பிரிக்கால்) மற்றும் K P இராசாமி அவர்கள் (KPR குரூப்) சிறப்பு விருந்தினராக பங்கேற்று சிறப்பிக்க உள்ளார்கள்.

தொடர்ந்து வரும் ஒன்பதாம் தேதி 9/1/24 நிறுவனர் நாள் கொண்டாட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கிடவும் முதியோர்களை கௌரவிக்கும் வகையில் பரிசுகள். ஏழ்மை நிலையில் உள்ள முதியோர்களுக்கு தேவையான மருத்துவ உபகரணங்கள் மருத்துவ பரிசோதனைகள் வழங்கிடவும் கேன்சர் போன்ற நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மருத்துவ உதவிகளும் செய்ய திட்டமிட்டுள்ளோம்.

நூற்றாண்டை முன்னிட்டு கோவை மாநகரின் மக்களுக்கும் மற்றும் வாடிக்கையாளர்களுக்கும் பல்வேறு சலுகைகளும்,திட்டங்களும் அறிமுக படுத்தப்பட்டுள்ளது. கோவை மக்கள் மனம் மகிழ மரக்கன்றுகள் நடும் திட்டமும், மருத்துவ முகாம் மூலம் பொது மருத்துவம் பராமரிப்பு இல்லாத சிறு கோவில் ஒன்றை பராமரிக்கவும்,ஏழை குழந்தைகளின் படிப்பு தேவைக்கு நோட்,புத்தகம் வழங்கவும், தங்கள் நிறுவனத்தில் பணிபுரியும் பணியாளர்களுக்கு மருத்துவ காப்பீடும், மற்றும் அவர்களின் குழந்தைகளுக்கு கல்விக்கு உதவிடவும் திட்டமிட்டுள்ளதாக என்று கோட்டா கோல்டு நிறுவனத்தின் நிர்வாகி பிரபஞ்சு கோட்டா,செந்தில் குமார் கவிதா தம்பதியினர் தெரிவித்தனர்.

B.R.நடராஜ் செட்டியார் 1924 ஆம் ஆண்டில் BRN ஜுவல்லரி என்ற நகைக் கடையை பெரிய கடைவீதியில் துவங்கினார்கள். அதன் பின்னர் துருக்குமார் அவர்களின் அயராத உழைப்பால் ராஜவீதியில் கோட்டா ஜுவல்லரி என்ற பெயரில் தங்கமான கடையாக உருவெடுத்தது. அதன் பின்னர் அவரின் குமாரர்கள் மூவரின் பங்கும் பெரிதும் வியங்கும் வண்ணம் இருந்தது.

அதன் தொடர்ந்து செந்தில்குமாரின் கடின உழைப்பால் இன்று கோட்டா கோல்டு திறம்பட செயல்படுகிறது.BRN ஜுவல்லரி மற்றும் கோட்டா ஜுவல்லரி பல்வேறு இடங்களுக்கு மொத்த விலையில்
BRN ஜுவல்லரி மறறும் கோட்டா ஜுவல்லரி மூலம் பல்வேறு மாநிலத்திற்கு மொத்த விலையில் தங்க நகைகள் செய்து பெரும் தொழில் முன்னேற்றத்தை உருவாக்கினர்.
பாரம்பரியமான நிறுவனமாக எங்களது பயணம் நூறாவது ஆண்டில் சேவையாற்றுவது மகிழ்ச்சி அளிக்கிறது என்று கூறினார்.

மேலும் படிக்க