• Download mobile app
06 Jun 2026, SaturdayEdition - 3769
FLASH NEWS
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கூவத்தூர் சொகுசு விடுதி 2 நாட்கள்மூடுவதாக நிர்வாகம் அறிவிப்பு

February 18, 2017 தண்டோரா குழு

பராமரிப்பு காரணமாக கூவத்தூர் தனியார் சொகுசு விடுதி 2 நாட்கள் மூடப்பட்டாதாக நிர்வாகம் அறிவித்துள்ளது.

அ.தி.மு.க ஓ.பி.எஸ் அணி, சசிகலா அணி இரண்டாக பிரிந்தது. இதனால் அதிமுக எம்எல்ஏக்கள் ஒவ்வொருவராக ஓ.பி.எஸ் அணிக்கு ஆதரவு தெரிவித்து வந்தனர். இதையடுத்து அதிமுக பொதுச்செயலாளர் சசிகலா அதிமுக எம்எல்ஏக்களை காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள கூவத்தூரில் உள்ள தனியார் சொகுசு விடுதியில் கடந்த 10 நாட்களாக தங்க வைக்கப்பட்டனர். அதிமுக பொதுசெயலாளர் சசிகலாவும் இங்கு தான் இரண்டு நாட்கள் தங்கியிருந்தார்.

தமிழகத்தில் கடந்த 10 நாட்களுக்கு மேலாக நடந்து வரும் அரசியல் அசாதாரண சூழலில் அதிகம் கவனிக்கப்பட்டது கூவத்தூர் ரிசார்ட் தான். இந்நிலையில், நம்பிக்கை வாக்கெடுப்பு காரணமாக அதிமுக எம்எல்ஏகள் இன்று அங்கிருந்து வெளியேறினர். இதையடுத்து, அங்கு பராமரிப்பு காரணமாக ரிசார்ட் மூடப்படுவதாக நிர்வாகம் அறிவித்துள்ளது.

மேலும் படிக்க