• Download mobile app
23 Jul 2026, ThursdayEdition - 3816
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கிறிஸ்தவர்கள் குறித்த தீர்மானத்தை வரவேற்று அப்போஸ்தலர் டேவிட் பிரகாசம் நன்றி

April 25, 2023 தண்டோரா குழு

கிறிஸ்தவர்களாக மதம் மாறிய ஆதிதிராவிடர்களுக்கு பட்டியலின மக்களுக்கான சட்ட சலுகைகளை வழங்க ஒன்றிய அரசை வலியுறுத்தும் வரலாற்று சிறப்புமிக்க தீர்மானம் தமிழ்நாடு சட்டப்பேரவையில் கொண்டு வரப்பட்டுள்ளது. இதற்கு கிறிஸ்தவ மக்கள் வரவேற்பை தெரிவித்து வருகின்றனர்.

இதனிடையே பெந்தெகொஸ்தே திருச்சபைகளின் மாமன்றத்தின் தலைவர் அப்போஸ்தலர் டேவிட் பிரகாசம் முதலமைச்சர் இத்தீர்மானத்தை கொண்டு வந்ததற்கு நன்றி தெரிவித்துள்ளார்.

அப்போஸ்தலர் டேவிட் பிரகாசம் கூறியதாவது:

நம்முடைய தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு, இந்தியன் பெந்தெகொஸ்தே அசெம்பிளிஸ் மற்றும் பெந்தெகொஸ்தே திருச்சபைகளின் மாமன்றத்தின் சார்பாக மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம். ஏறத்தாழ எழுபது ஆண்டுகளுக்கு மேலாக தலித் கிறிஸ்தவர்களுக்கு கிறிஸ்தவ சமுதாயத்தில் பின்தங்கி இருந்த மக்களுக்கு இட ஒதுக்கீடுகள் மறுக்கப்பட்டு வந்தது. ஆனால் கடந்த வாரத்தில் தமிழக சட்டசபையில் திருச்சி கிழக்கு சட்டமன்ற உறுப்பினர் திரு. இனிகோ இருதயராஜ் கிறிஸ்தவ மக்களுக்கான கோரிக்கையை எழுப்பினார்.

அந்தக் கோரிக்கையை தமிழக அரசு ஏற்றுக்கொண்டு முதலமைச்சர் அவர்கள் சட்டசபையில் தீர்மானத்தை முன்மொழிந்து அதை நிறைவேற்றி இருக்கிறார். மேலும், மத்திய அரசுக்கும் பரிந்துரை செய்திருக்கிறார்கள். சமுதாயத்தில் பின்தங்கிய ஒடுக்கப்பட்ட மக்களுக்கு உரிமைகள் கொடுக்கப்பட்டதற்கு நன்றி. இவ்வாறு அப்போஸ்தலர் டேவிட் பிரகாசம் கூறினார்.

மேலும் படிக்க