• Download mobile app
01 Jun 2026, MondayEdition - 3764
FLASH NEWS
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கயிறுகள் பயன்படுத்தாமல் மலை ஏறி சாதனை செய்த வீரர்

June 6, 2017 தண்டோரா குழு

மலையேறு வீரர் அலெக்ஸ் ஹோண்நோல்ட் கயிறுகளை பயன்படுத்தாமல் எல் காபிடன் மலை சிகரத்தை வெற்றிகரமாக ஏறி சாதனை படைத்துள்ளார்.

அமெரிக்க நாட்டின் கலிபோர்னியா மாகணத்திலுள்ள சாக்ரமெண்டோ நகரை சேர்ந்தவர் அலெக்ஸ் ஹோண்நோல்ட்(31). புகழ்பெற்ற மலையேறும் வீரர் கூட. இவர், வட கலிபோர்னியாவிலுள்ள சியரா நெவாடா மலைபகுதியில் யோசெமைட் தேசிய பூங்காவில், 3,௦௦௦ அடி கொண்ட எல்காப்தியன் என்னும் மலையை 3 மணிநேரம் 56 நிமிடங்களில் ஏறி சாதனை புரிந்துள்ளார். அமேரிக்கா, சீனா, ஐரோப்பா, மற்றும் மொராக்கோ ஆகிய இடங்களிலுள்ள மலைபகுதியில் கடந்த ஒரு ஆண்டு காலமாக பயிற்சி எடுத்துக்கொண்டார்.

இது குறித்து, அலெக்ஸ் கூறுகையில்,

“எனக்கு ஏற்படும் பயத்தை கட்டுப்படுத்தும் திறனால்தான், எனக்கு வெற்றியை தருகிறது. அதுவும் தனிமையாக மலை ஏறும்போது, பல ஆபத்துகளை தரும் என்று நன்கு அறிவேன். பயத்துடன் மலையேறும் போதும், எனக்கு எந்த உதவியும் கிடைக்கப்போவதில்லை. அது என்னுடைய செயல்திறனுக்கு தடையாக தான் இருக்கும். அதனால் நான் பயத்தை விட்டுவிடுவேன்” என்று கூறினார்.

மேலும் படிக்க