• Download mobile app
01 Jun 2026, MondayEdition - 3764
FLASH NEWS
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

உள்ளாடைகளில் மறைத்து கொண்டு வரப்பட்ட ரூ.1.9 கோடி மதிப்பிலான 3.03 கிலோ தங்கம் -இருவர் கைது

May 15, 2023 தண்டோரா குழு

கோவை சர்வதேச விமான நிலையத்தில் இருந்து தினமும் ஏராளமான விமானங்கள் வந்து செல்கின்றன. இந்நிலையில் சார்ஜாவில் இருந்து கோவைக்கு வரும் ஏர் அரேபியா விமானத்தில் தங்கம் கடத்தி வரப்படுவதாக மத்திய வருவாய் புலனாய்வு துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

அதன்படி நேற்று சார்ஜாவில் இருந்து கோவைக்கு ஏர் அரேபியா விமானம் வந்தது. அதில் 4 பயணிகளின் நடவடிக்கையில் சந்தேகம் ஏற்பட்டது. இதனை அடுத்து அவர்களை அதிகாரிகள் சோதனை செய்தனர். மேலும் அவர்கள் கொண்டு வந்த பைகளிலும் சோதனை நடத்தப்பட்டது.அப்போது அதில் 2 பேர் பேண்ட் பாக்கெட் மற்றும் உள்ளாடைகளில் மறைத்து வைத்து 3.03 கிலோ தங்கத்தை கடத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இதன் மதிப்பு ரூ.1 கோடியே 9 லட்சம் ஆகும்.விசாரணையில் அவர்கள் புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த ஜியாவுதீன் (வயது 27), சென்னையைச் சேர்ந்த ஷேக் முகமது (31) ஆகியோர் என்பது தெரியவந்தது. அதிகாரிகள் அவர்களை கைது செய்தனர். மேலும் கடத்தி வரப்பட்ட தங்கத்தையும் பறிமுதல் செய்தனர்.

மேலும் படிக்க