• Download mobile app
18 May 2024, SaturdayEdition - 3020
FLASH NEWS
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

இலங்கை அரசியலில் திடீர் திருப்பம் – அதிபராக மஹிந்த ராஜபக்சே பதவியேற்ப்பு

October 26, 2018 தண்டோரா குழு

இலங்கை அரசியல் களத்தில் யாரும் எதிர்பாராத விதமாக பரபரப்பு திருப்பம் ஏற்பட்டுள்ளது. இலங்கை நாட்டின் 11-வது பிரதமராக முன்னாள் அதிபர் மஹிந்த ராஜபக்சே பதவியேற்றுள்ளார்.

கடந்த 2005-ம் ஆண்டு முதல் முறையாக மஹிந்த ராஜபக்சே இலங்கை அதிபரானார்.தொடர்ந்து 2010 தேர்தலில் போட்டியிட்டு இரண்டாவது முறையாக இலங்கை அதிபரானார்.இலங்கையில் ஒருவர் இரண்டு முறை மட்டுமே அதிபராக முடியும். ஆனால், 2010-ம் ஆண்டு இந்தச் சட்டத்தை மாற்றிய ராஜபக்சே மூன்றாவது முறையாக 2015-ம் ஆண்டு அதிபர் பதவிக்கு போட்டியிட்டார். ஆனால்,அவர் தோல்வியடைந்தார். இலங்கையின் புதிய அதிபராக மைத்திரி பால சிறிசேனா பதவியேற்றார்.சிறிசேனா அமைச்சரவையில்பிரதமராகமுன்னாள்அதிபர்ரணில்விக்கரமசிங்கே பதவி ஏற்றுச் செயல்பட்டு வந்தார்.

இந்நிலையில் இன்று திடீரென பிரதமராக இருந்த ரணில் விக்கரமசிங்கே அதிரடியாக நீக்கப்பட்டு அவருக்குப் பதிலாக மஹிந்த ராஜபக்சே பிரதமராக பதவி ஏற்றுள்ளார்.அதிபர் அலுவலகத்தில் நடந்த விழாவில் ராஜ்பக்சேவுக்கு சிறிசேனா முன்னிலையில் பிரதமராக ராஜபக்சே பதவி ஏற்றுக்கொண்டார்.
ஆளும் கூட்டணி்யில் ஏற்பட்ட பிளவு காரணமாக இந்த பிரதமர் பதவி மாற்றம் நிகழ்ந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் படிக்க