• Download mobile app
21 May 2024, TuesdayEdition - 3023
FLASH NEWS
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

இலங்கையில் உள்ள 51 தமிழக மீனவர்கள் விடுதலை

January 6, 2017 தண்டோரா குழு

இலங்கையில் உள்ள தமிழக மீனவர்கள் 51 பேரை விடுதலை செய்து இலங்கை அரசு உத்தரவிட்டுள்ளது.

இலங்கை யாழ்ப்பாணம் சிறையில் அடைக்கப்பட்டிருந்த தமிழக மீனவர்கள் 51 பேர் வெள்ளிக்கிழமை விடுதலை செய்யப்பட்டுள்ளனர். மீனவர்களை விடுதலை செய்து இலங்கை ஊர்காவல்படை , மன்னார் நீதிமன்றங்கள் உத்தரவிட்டுள்ளன.

இந்தியா இலங்கை அமைச்சர்கள் நிலையிலான பேச்சுவார்த்தையை அடுத்து தமிழக மீனவர்கள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர் என தகவல் வெளியாகியுள்ளது. மேலும், வியாழக்கிழமை கைது செய்யப்பட்ட 10 மீனவர்களும் ஓரிரு நாட்களில் விடுதலை செய்யப்படுவார்கள் என இலங்கை அரசு தகவல் தெரிவித்துள்ளது. இதனிடையே வெள்ளிக்கிழமை விடுதலை செய்யப்பட்ட தமிழக மீனவர்கள் 51 பெரும் ஓரிரு நாட்களில் தமிழகம் அழைத்து வரப்படுவார்கள் என அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.

முன்னதாக தமிழக மீனவர்கள் 51 பேரை விடுவிக்க இலங்கை அரசு வெள்ளிக்கிழமை தீர்மானம் நிறைவேற்றியது. இதையடுத்து தமிழக மீனவர்கள் நீதிமன்றங்களில் ஆஜர்படுத்தப்பட்டு விடுவிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது .

மேலும் படிக்க