• Download mobile app
01 Jun 2026, MondayEdition - 3764
FLASH NEWS
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

இரத்தினம் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 19 -வது பட்டமளிப்பு விழா

May 13, 2023 தண்டோரா குழு

இரத்தினம் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 19 -வது பட்டமளிப்பு விழா இன்று கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது.

2020-2021 -ஆம் கல்வி ஆண்டில் பயின்ற மாணவ,மாணவிகளுக்கு பட்டம் அளித்து கௌரவிக்கப்பட்டார்கள்.பட்டமளிப்பு விழாவிக்கு சிறப்பு விருந்தினராக கருணாகரன் விநாயகம் Talent acquisition Genpact ,பெங்கலூர் துணைத்தலைவர் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார். நாட்டின் அவர் உரையில் கற்றல் என்பது ஒரு தொடர்ச்சியான செயல்முறையாகும் , இது பட்டதாரிகளை பொறுப்புள்ள குடிமக்களாக வடிவமைப்பதில் ஆசிரியர்களின் கடின உழைப்பும் அர்ப்பணிப்பும் தேவை என்று சுட்டிக்காட்டினார்.

ரத்தினம் கலை மற்றும் அறிவியல் கல்லூரி கல்வியில் உயர் தரத்தை பராமரித்து , இளம் பட்டதாரிகளை சமூகத்தின் உறுப்பினர்களாக மாற்ற உதவுகிறது.தகவல் தொழில்நுட்பத் துறைகளில் எதிர்காலம் அவற்றுடன் போட்டியிட மாணவர்கள் தங்கள் தனிப்பட்ட அறிவை எவ்வாறு மேம்படுத்த வேண்டும் என்பதையும் அவர் குறிப்பிட்டார்.

பல்வேறு இளங்கலை மற்றும் முதுகலை துறைகளைச் சேர்ந்த 1300 க்கும் மேற்பட்ட மாணவர்கள்,பி.ஏ. ஆங்கிலம் , BBA , CDF , இயற்பியல்,கணிதம் , உளவியல் , விஷுவல் கம்யூனிகேஷன், வர்த்தகம் , B.Com PA , B.Com CA , B.Com BPS, Computer Science , Computer Technology , Information Technology , M.Sc Maths , MBA , MJMC , மேற்கண்ட துறைகளைச் சேர்ந்த எம்எஸ்சி சிஎஸ் , எம்எஸ்சி ஐடி , எம்காம் மற்றும் எம்காம் சிஏ மாணவர்கள் தங்களது பட்டப்படிப்புச் சான்றிதழ்களைப் பெற்றனர் .

மேலும் கல்லூரி முதன்மை நிர்வாக அதிகாரியும், செயலாளருமான முனைவர் ஆர் . மாணிக்கம் தலைமைறேற்று தலைமை உரையாற்றினார். கல்லூரி முதல்வர் 5. பாலசுப்பிரமணியன் புலமுதன்மையர்கள் முனைவர் சுரேஷ், முனைவர் K.P.V சபாஷ் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள்.

மேலும் படிக்க