• Download mobile app
30 Apr 2024, TuesdayEdition - 3002
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

இடியுடன் கூடிய கோடை மழை பெய்ய வாய்ப்பு – சென்னை வானிலை ஆய்வு மையம்

May 10, 2017 தண்டோரா குழு

தமிழகத்தின் உள்மாவட்டங்களில் இடியுடன் கூடிய கோடை மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலசந்திரன் கூறியுள்ளார்.

இது குறித்து அவர் கூறியதாவது;

தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில், திருச்சி, தஞ்சாவூர், நாமக்கல் உள்ளிட்ட பகுதிகளில் ஒரு சில இடங்களில் கோடை மழை பெய்துள்ளது. அதிகபட்சமாக திருச்சி மாவட்டம் புல்லம்பாடியில் 7 செ.மீ., மழையும், திருவள்ளூர் மாவட்டம் பூண்டியில் 6 செ.மீ., மழையும் பெய்துள்ளது.

அடுத்த 48 மணி நேரத்தில் உள்மாவட்டங்களில் இடியுடன் கூடிய கோடை மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. சென்னை புறநகர் பகுதிகளில் இடியுடன் கூடிய லேசான மழை பெய்யும்.

தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு வெயிலின் தாக்கம் குறைவாக இருக்கும். கடலோர பகுதிகளில் வெயில் 36 முதல் 38 டிகிரி செல்சியஸ் பதிவாகும். உள்மாவட்டங்களில் 40 முதல் 42 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவாகும்.”

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் படிக்க