• Download mobile app
20 May 2024, MondayEdition - 3022
FLASH NEWS
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

அமெரிக்காவில் ரயில் விபத்து, 1௦௦ காயம்

January 5, 2017 தண்டோரா குழு

அமெரிக்காவில் புதன்கிழமை நடந்த ரயில் விபத்தில் 1௦௦ பேர் காயமடைந்தனர். நல்லகாலமாக உயிர்ச் சேதம் ஏதுமில்லை.

அமெரிக்கா, லாங் ஐலண்ட் ரயில் ரோடு என்னும் இடத்திலிருந்து கிளம்பிய ரயில் நியூயார்க் நகரின் ப்ரூக்ளின் ரயில் நிலையத்தில் உள்ள பணிமனை மீது மோதியதில் அங்கு இருந்த 1௦௦ காயமடைந்தனர்.

தகவல் அறிந்த தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பார்வையிட்டனர். தீயணைப்பு அதிகாரி ஒருவர் கூறுகையில், “இந்த விபத்தில் ரயில் தண்டவாளம் அதிகமாகச் சேதமடைந்துள்ளது” என்றார்.

நியூயார்க் நகர் ஆளுநர் ஆண்ட்ரூ க்யூமோ கூறுகையில், “ரயில் மெதுவாக சென்றுள்ளது. இச்சம்பத்தில் ரயில் தடம்புரண்டவில்லை” என்றார்.

விபத்தில் சிக்கி படுகாயம் அடைந்த 11 பேர் அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். மற்றவர்கள் லேசான காயங்களுடன் தப்பினர். இந்த விபத்தில் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் காயம் அடைந்துள்ளனர் என அதிகாரிகள் தெரிவித்தனர். காயமடைந்தவர்களுக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர். விபத்தில் சிக்கிய ரயில் வண்டியில் 6௦௦ முதல் 7௦௦ பேர் பயணம் செய்தனர் என்று கணக்கிடப்பட்டுள்ளது.

வண்டியிலிருந்து கீழே இறங்க பலர் நின்று கொண்டிருந்தனர் என்று தகவல் வெளியாகியுள்ளது. இச்சம்பவம் குறித்து நியூயார்க் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் படிக்க