• Download mobile app
16 Jul 2026, ThursdayEdition - 3809
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

அப்துல்கலாம் மணிமண்டபத்தை பிரதமர் மோடி திறந்து வைக்கிறார்

July 8, 2017 தண்டோரா குழு

ராமேசுவரத்தில் ரூ.15 கோடியில் மதிப்பில் கட்டப்பட்டுள்ள அப்துல் கலாம் மணிமண்டபத்தை பிரதமர் மோடி 27-ந்தேதி திறந்து வைக்கிறார்.

முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாமின் நினைவிடம் அவரது சொந்த ஊரான ராமேஸ்வரம் அருகே பேக்கரும்பில் உள்ளது. இங்கு மத்திய பாதுகாப்பு துறையின் சார்பில் ரூ.50 கோடி மதிப்பில் அப்துல்கலாம் மணிமண்டபமும், அறிவுசார் மையமும் அமைக்க முடிவு செய்யப்பட்டு அதற்கான பணிகளும் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

இதில், முதல் கட்டமாக பேக்கரும்பில் அப்துல்கலாம் மணிமண்டபம் ரூ.15 கோடி மதிப்பில் கட்டப்பட்டு பணிகள் முடியும் நிலையில் உள்ளன. இதன் திறப்பு விழா அப்துல்கலாமின் 2-ம் ஆண்டு நினைவு நாளான வருகிற 27-ந்தேதி நடைபெற உள்ளது.

இந்த விழாவில் பிரதமர் மோடி கலந்து கொண்டு மணிமண்டபத்தை திறந்து வைக்கிறார் மேலும், முதல் -அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, மத்திய மந்திரிகள் வெங்கையா நாயுடு, பொன்ராதாகிருஷ்ணன் மற்றும் அமைச்சர்கள், பாரதீய ஜனதா மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் உள்பட முக்கிய தலைவர்கள் கலந்து கொள்கிறார்கள்.

மேலும், மணிமண்டபத்தை திறந்து வைக்கும் பிரதமர் மோடி ரூ.50 கோடி மதிப்பில் முகுந்தராயர்சத்திரத்தில் இருந்து தனுஷ்கோடி அரிச்சல்முனை வரை போடப்பட்டுள்ள புதிய சாலையையும் திறந்து வைக்கிறார்.

பிரதமர் மோடி 27-ந் தேதி ராமேஸ்வரம் வருவதையொட்டி பாதுகாப்பு துறை அதிகாரிகள் பாம்பன் பாலம், ராமநாதசுவாமி கோவில், தனுஷ்கோடி ஆகிய பகுதிகளில் ஆய்வு செய்தனர்.

மேலும் படிக்க