• Download mobile app
03 May 2024, FridayEdition - 3005
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

ஃபார்முலா E கார் பந்தயத்தில் பங்கேற்கும் முதல் இந்தியப் பெண்

April 29, 2017 தண்டோரா குழு

பாலிவுட் நடிகையும், கார் பந்தய வீராங்கனையுமான “குல் பனாக்” ஃபார்முலா E கார் பந்தயத்தில் பங்கேற்கும் முதல் இந்தியப் பெண் என்ற பெருமையைப் பெற்றுள்ளார்.

பாலிவுட் நடிகையான குல் பனாக் திரைத்துறையில் மட்டுமல்லாமல் கார் பந்தய வீராங்கனை மற்றும் விமானி என பல்துறைகளிலும் தனது திறமையை வெளிப்படுத்தி வருகிறார்.இந்நிலையில், ஸ்பெயின் நாட்டின் பார்சிலோனா நகரில்ஃபார்முலா E கார் பந்தய போட்டி நடைபெறவுள்ளது.

இப்போட்டியில் கலந்துகொள்ள குன் பனாக் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.இக்கார் பந்தய போட்டியில் கலந்துகொள்ள தானும் ஒருவராக தேர்வானது மகிழ்ச்சியளிப்பதாக குல் பனாக் தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் இருந்து முதல் பெண்ணாக இவர் இப்போட்டியில் கலந்துகொள்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க