• Download mobile app
18 May 2026, MondayEdition - 3750
FLASH NEWS
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

முதன் முறையாக காவல் துறையினருக்கென பிரத்யேக முகக்கவசம் – கோவையில் அறிமுகம் !

August 14, 2020 தண்டோரா குழு

கோவையை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் சிவா டெக்ஸ்யார்ன் லிமிடெட் டெக்னிக்கல் டெக்ஸ்டைல் துறையில் ஒரு முன்னனி நிறுவனமாகும்.இந்நிறுவனத்தின் முக கவசங்கள், தற்காப்பு உடைகள் உள்நாட்டில் மட்டுமல்லாது உலகளவில் மிகவும் பிரசித்தி பெற்றவையாகும்.

இந்நிறுவனத்தின் சமீபத்திய தயாரிப்பான ஆன்டி வைரஸ் முக கவசம் வைரஸ் மற்றும் பாக்டீரிய தொற்றுகளில் இருந்து 99.01 % சதவிகிதம் பாதுகாத்துக் கொள்ளக்கூடிய வகையிலும் நம்மை அச்சுறுத்தி வரும் கொரோன போன்ற எந்தவிதமான தொற்று கிருமிகளையும் இம்முகக்கவசத்தின் மீது பட்ட உடனே செயல் இழக்க செய்யும் வகையிலும் ஸ்விஸ் ரசாயன தொழில் நாட்டு நுட்பத்துடன் இணைந்து இந்தியாவில் முதன்மையாகவும் தனித்துவமாகவும் பிரத்தியேகமாகவும் நம் நாட்டில் தயாரிக்கப்பட்டு உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் விற்பனையாகிவரும் இம்முகக்கவசம் சலவை செய்து பயன்படுத்தக்கூடிய வகையில் தயாரிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் காவல் துறையினரின் பாதுகாப்புக்கு உதவும் வகையில் அதே தொழில்நுட்பத்தை பயன்படுத்தி காவல் துறையினருக்கென்று பிரத்தியேகமாக அவர்களுடைய சீருடை வண்ணத்தில் தயாரிக்கப்பட்ட சுமார் ரூ.4 லட்சம் மதிப்பிலான 5000ம் முகக் கவசங்களை கோவை நகர காவல்துறை ஆணையர் சுமித் சரண் ஐபிஎஸ் அவர்களிடம் சிவா டெக்ஸ்யார்ன் லிமிடெட்டின் நிர்வாக இயக்குநர் டாக்டர் எஸ்.கே.சுந்தரராமன் நேரில் வழங்கினார்.

அப்போது அவர் கோவை நகரில் இரவு பகல் பாராது பணியாற்றி வரும் காவலர்களுக்கு இச்சூழ்நிலையில் இத்தகைய முகக் கவசம் மிகவும் பயனுள்ளது என்றும் காவலர்கள் பொதுவெளியில் பாதுகாப்புடனும் கொரோனா தொற்று அச்சமின்றியும் பணியாற்ற ஏதுவாக முகக்கவசம் உதவும் என்றும் தெரிவித்தார். அவர்களுடன் காவல் துறை உயர் அதிகாரிகளும் நிறுவனத்தினரும் உடனிருந்தார்.

மேலும் படிக்க