• Download mobile app
24 Oct 2025, FridayEdition - 3544
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

பெரியநாயக்கன்பாளையம் (மேற்கு) பகுதியில் நவம்பர் மாதம் மின்கட்டனம் செலுத்த வேண்டுகோள்

January 15, 2022 தண்டோரா குழு

மின் வினியோக செயற்பொறியாளர் தமிழ்ச்செல்வன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:

கோவை வடக்கு வட்ட வடமதுரை கோட்டத்திற்கு உட்பட்ட பெரியநாயக்கன்பாளையம் (மேற்கு) பகுதியில் நிர்வாக காரணங்களால் இந்த மாதம் மின் கணக்கீட்டு பணி மேற்கொள்ள முடியவில்லை. இதனால் மத்தம்பாளையத்தில் 2091, செல்வபுரத்தில் 1065, பிளிச்சியில் 361 இணைப்புகள் உள்ள மின் நுகர்வோர்கள் தங்களது கடந்த நவம்பர் மாத மின்கட்டணத்தையே இந்த மாதமும் செலுத்தும்படி அறிவுறுத்தப்படுகிறது.

மேலும் மின் நுகர்வோர்கள் தங்களது மின் மீட்டரில் உள்ள மின் அளவை புகைப்படம் எடுத்து தெரிவித்தால் அந்த அளவை ஏற்றுக்கொண்டும் கட்டணம் விதிக்கப்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும் படிக்க