• Download mobile app
15 Mar 2026, SundayEdition - 3686
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

தேர்தல் விதிமுறைகளை கண்காணிக்க கோவை மாவட்டத்தில் 30 பறக்கும் படைகள்

February 27, 2021 தண்டோரா குழு

தேர்தல் விதிமுறைகளை கண்காணிக்க
கோவை மாவட்டத்தில் 30 பறக்கும் படைகள்

தமிழகம், புதுச்சேரி, கேரளா, மேற்கு வங்கம், அசாம் சட்டமன்றங்களுக்கு தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்திற்கு ஒரே கட்டமாக தேர்தல் ஏப்ரல் 6-ம் தேதி சட்டமன்ற தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது.

கோவை மாவட்டத்தில் தேர்தல் அதிகாரியாக மாவட்ட கலெக்டர் ராஜாமணி நியமிக்கப்பட்டுள்ளார்.கோவையில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் வந்துள்ளது. இதன் ஒரு பகுதியாக தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறுவோர் மீது நடவடிக்கை எடுக்கும் விதமாக பறக்கும் படைகள் அமைக்கப்பட உள்ளன.

இதுகுறித்து மாவட்ட தேர்தல் பிரிவு அதிகாரிகள் கூறுகையில்,

‘கோவை மாவட்டத்தில் மொத்தம் 10 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன. இப்பகுதிகளில் விதிகளை மீறி பணம் மற்றும் பொருட்கள் எடுத்து செல்வோரை கண்காணிக்க 30 பறக்கும் படைகள் அமைக்கப்பட உள்ளன. இவர்கள் 10 தொகுதிகளிலும் செக் போஸ்ட் அமைத்து சுழற்சி முறையில் பணியாற்றுவார்கள்.

ஒரு தொகுதிக்கு 3 பறக்கும் படைகள். 8 மணி நேரம் சுழற்சி அடிப்படையில் பணியாற்றுவார்கள்.பறக்கும் படையில் வட்டாட்சியர் அல்லது வட்டாட்சியர் பதவி மதிப்பின் அடிப்படையில் 1 அதிகாரியும், வருவாய் துறை, காவல்துறை என மொத்தம் 7 பேர் வரை பணியாற்றுவார்கள்.இவர்கள் வாகனங்களை முழுவதுமாக பரிசோதனை செய்து தீவிரமாக கண்காணிப்பதுடன். தேர்தல் கட்டுப்பாட்டு அறைக்கு வரும் புகார் குறித்தும் நடவடிக்கை எடுப்பார்கள்,’’ என்றனர்.

மேலும் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால் மேம்பாலங்கள், சாலையோர சுவர்கள் என மாநகர் பகுதிகளில் உள்ள இடங்களில் உள்ள அரசியல் போஸ்டர்கள், பதாதைகள், விளம்பரங்கள் உள்ளிட்டவற்றை மாநகராட்சி ஊழியர்கள் நேற்று அகற்றினார்கள். அவினாசி மேம்பாலம், காந்திபுரம் மேம்பாலம் உள்ளிட்டவற்றில் உள்ள போஸ்டர்கள் அகற்றப்பட்டு அங்கு மீண்டும் வண்ணம் பூசப்பட்டது.

அதே போல் தலைவர்களின் சிலைகளும் மறைக்கப்பட்டன.அதே போல் ச்கோவை மாவட்டத்தில் உள்ள எம்.எல்.ஏக்கள் அலுவலகங்கள் மூடல். நேற்று முன் தினம் 4.30 மணிக்கு தேர்தல் அறிவிப்பு வெளியானது. இதனை அடுத்து 24 மணி நேரம் வரை எம்.எல்.ஏக்கள் அலுவலகத்தில் உள்ள பொருட்களை எடுத்துக்கொள்ள அனுமதியளிக்கப்பட்டது.

இதன் அடிப்படையில் மாவட்டத்தில் உள்ள எம்.எல்.ஏக்கள் அலுவலகத்தில் உள்ள பொருட்கள் எடுக்கப்பட்டு அலுவலகங்கள் மூடப்பட்டன.

மேலும் படிக்க