• Download mobile app
14 Sep 2025, SundayEdition - 3504
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

ஆலப்புலா – தன்பாத், எர்ணாக்குளம் – பெங்களூரு சிறப்பு ரயில்கள் இருகூர் – போத்தனூர் வழித்தடத்தில் இயக்கம்

April 7, 2021 தண்டோரா குழு

கோவை – வடகோவை இடையே பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால், 2 கோவை ரயில்கள், 5 நாள்களுக்கு கோவை ரயில் நிலையம் செல்லாமல், இருகூர் – போத்தனூர் இடையே இயக்கப்பட உள்ளது.

இதுகுறித்து, சேலம் கோட்ட ரயில்வே நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

கோவை – வடகோவை ரயில் நிலையம் இடையே பொறியியல் மற்றும் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளதால், ஏப்ரல் 8, 10,12,14,17ம் தேதிகளில் ஆலப்புலா – தன்பாத் சிறப்பு ரயில் மற்றும் எர்ணாக்குளம் – பெங்களூரு சிறப்பு ரயில் ஆகிய 2 ரயில்கள், கோவை ரயில் நிலையத்திற்கு வராமல் இருகூர் – போத்தனூர் இடையே இயக்கப்பட உள்ளன.

இதனால், பீளமேடு, சிங்காநல்லூர் நிலையங்கள் வழியாக இந்த நாள்களில் இயக்கப்படாது.இந்த ரயில்களில் பயணிக்க, பயணிகள் இருகூர் அல்லது போத்தனூர் நிலையங்களுக்கு செல்லுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க