• Download mobile app
17 May 2024, FridayEdition - 3019
FLASH NEWS
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

சுவையான மட்டன் கோலா

January 20, 2018 tamilsamayam.com

தேவையான பொருட்கள்

எலும்பு நீக்கிய கறி – கால் கிலோ

சின்ன வெங்காயம் – 25

தேங்காய் துருவல் – அரை கப்

பெருஞ்சீரகம் – 2 தேக்கரண்டி

பொட்டுகடலை – அரை கப்

மிளகாய் தூள் – 2 தேக்கரண்டி

மஞ்சள் தூள் – அரை தேக்கரண்டி

உப்பு – 3/4 தேக்கரண்டி

செய்முறை:

எலும்பில்லாத ஆட்டுக் கறியை வாங்கிக் கொள்ளவும். இது அரைப்பதற்கு எளிதாக இருக்கும். இளம் ஆட்டுக்கறி நல்ல சுவையாக இருக்கும்.சின்ன வெங்காயத்தை தோலுரித்து, பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.

கறியை நன்கு கழுவி சுத்தம் செய்துவிட்டு தண்ணீர் விடாமல் மிக்ஸியில் போட்டு அரைக்கவும். கறி நன்கு விழுது போல் இருக்க வேண்டும். அப்போதுதான் கோலா நன்றாக வரும். (கறியில் கொழுப்பு போன்றவை இருந்தால் அவற்றை நீக்கிவிடவும். பொரித்து எடுப்பதால், கொழுப்பு கோலாவின் சுவையை மாற்றிவிடும்.

மிக்ஸியில் பொட்டுகடலையை மட்டும் போட்டு, சிறிது தண்ணீர் ஊற்றி சற்று கெட்டியாக அரைத்து எடுத்துக் கொள்ளவும். தேங்காய், பெருங்சீரகம் இரண்டையும் சேர்த்து அரைத்துக் கொள்ளவும். இரண்டையும் ஒரு பாத்திரத்தில் போட்டு, மிளகாய்த்தூள், மஞ்சள் தூள், உப்பு சேர்க்கவும்.

பின்னர் அதில் அரைத்து வைத்துள்ள கறி மற்றும் நறுக்கின வெங்காயம் சேர்க்கவும். பூண்டு விரும்புகின்றவர்கள் ஒன்றிரண்டு பூண்டினையும் தட்டிப் போட்டுக் கொள்ளலாம்.அனைத்தையும் ஒன்றாய் சேர்த்து, தண்ணீர் சேர்க்காமல் பிசையவும். பிசைந்த மாவினை சிறு சிறு உருண்டைகளாக பிடித்து வைத்துக் கொள்ளவும்.

வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் உருட்டி வைத்துள்ள உருண்டைகளை, போட்டு பொரித்து எடுக்கவும்.சுவையான மட்டன் கோலா உருண்டை தயார்!

மேலும் படிக்க