தேவையான பொருட்கள்:
வறுத்த பாசிப்பருப்பு மாவு – 1 கப்.
சர்க்கரை – 2 கப்.
நெய் – 3/4 கப்.
செய்முறை:
சர்க்கரை மூழ்கும் அளவு நீர் விட்டு ஒரு பாத்திரத்தில் ஒற்றை கம்பி பாகு வரும் வரை காய்ச்சவும்.
இன்னொரு அடுப்பில் சிறு தீயில் நெய்யை சூடாக்கவும்.கம்பி பாகு வந்ததும் மாவை கட்டியில்லாமல் தூவி நன்கு கிளறி இறக்கவும்.
ஒரு கரண்டியால் சூடான நெய்யை மாவில் கொஞ்ச கொஞ்சமாக ஊற்றி நன்கு கெட்டியாகி பாத்திரத்தில் ஒட்டாமல் வரும் போது இறக்கவும்.உடனே ஒரு நெய் தடவிய தட்டில் கொட்டி சமப்படுத்தி ஆறிய பிறகு துண்டுகள் போடவும்.
குறிப்பு:
கடையில் விற்கும் வறுத்த பாசிப்பருப்பு மாவை உபயோகித்தால் நன்றாகயிருக்கும்.ஒற்றை கம்பி பதம் என்பது 2 விரல்களுக்கிடையே ஒற்றை இழைபோல வரும். அதுதான் பர்பி செய்ய சரியான பதம்.தூளாக வந்த பர்பியை மிக்ஸியில் ஒரு சுற்று சுற்றி லட்டுகளாக பிடிக்கவும்.
நோய் எதிர்ப்பு ஆற்றலை வலிமைப்படுத்தும் விதமாக நியூட்ரிலைட் டிரிப்பிள் புரட்டக்ட் ஆம்வே இந்தியா அறிமுகம்
ஜெம் மருத்துவமனை மற்றும் இந்திய கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை சங்கம் சார்பில் தேசிய கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை மாநாடு மற்றும் மேம்பட்ட மருத்துவ பயிற்சி
வி.ஜி.எம். அறக்கட்டளை மற்றும் கரூர் வைஸ்யா வங்கி இணைந்து அதிநவீன இரத்த வங்கியை தொடங்கியுள்ளது
சுந்தரி கிருஷ்ணகுமார் காலமானார்
விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்திய கேம்போர்டு இன்டர்நேஷனல் பள்ளி மாணவர்கள்
ஸ்கோடா பிராண்ட் இந்தியாவில் நன்கு வலுப்படுத்தி, 2025-ஆம் ஆண்டு ஒரு வளர்ச்சியின் ஆண்டாக உருவாகிவருகிறது