• Download mobile app
09 May 2024, ThursdayEdition - 3011
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

சுரைக்காய் இனிப்பு போளி

February 14, 2018 tamil.boldsky.com

தேவையான பொருட்கள்:

மைதா – 1 கப்

உப்பு – தேவையான அளவு

நெய் – தேவையான அளவு

தண்ணீர் – தேவையான அளவு

பூர்ணம் செய்வதற்கு…

துருவிய சுரைக்காய் – 1 கப்

சர்க்கரை – 3/4 கப்

ஏலக்காய் தூள் – 1/4 டீஸ்பூன்

பால் – 1/2 கப்

கேசரி பவுடர் – 1 சிட்டிகை

செய்முறை:

முதலில் ஒரு பாத்திரத்தில் மைதா, உப்பு மற்றும் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி, சப்பாதி மாவு பதத்திற்கு நன்கு மென்மையாக பிசைந்து கொள்ள வேண்டும்.

பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் நெய் ஊற்றி காய்ந்ததும், சுரைக்காயை சேர்த்து நன்கு வதக்கி, பின் பால் சேர்த்து நன்கு மென்மையாக வேகும் வரை கொதிக்க விட வேண்டும்.

பிறகு அதில் கேசரி பவுடர், சர்க்கரை சேர்த்து கிளறி விட வேண்டும். கலவையானது கெட்டியாக வர ஆரம்பிக்கும் போது, அதில் சிறிது நெய் மற்றும் ஏலக்காய் தூள் சேர்த்து கிளறி இறக்கி குளிர வைக்க வேண்டும்.

இறுதியில் மைதா மாவை சிறு உருண்டைகளாக பிரித்து, சப்பாத்தி போன்று தேய்த்து, நடுவே ஒரு ஸ்பூன் சுரைக்காய் கலவையை வைத்து, நான்கு புறகும் மடித்து, மீண்டும் ஒருமுறை லேசாக தேய்த்துக் கொள்ள வேண்டும்.

பின் தோசைக் கல்லை அடுப்பில் வைத்து காய்ந்ததும், அதில் தேய்த்து வைத்துள்ள போளியை போட்டு, நெய் ஊற்றி முன்னும் பின்னும் நன்கு வேக வைத்து இறக்கினால், சுரைக்காய் இனிப்பு போளி ரெடி!!!

மேலும் படிக்க