• Download mobile app
16 Mar 2026, MondayEdition - 3687
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

சாய் பல்லவிக்கு போட்டியாக அவரது தங்கை

May 2, 2017 தண்டோரா குழு

பிரேமம் திரைப்பட புகழ் மலர் டீச்சருக்கு போட்டியாக அவரது தங்கை களமிறங்க உள்ளார்.

மலையாளத்தில் வெளியான பிரேமம் திரைப்படத்தில் மலர் டீச்சராக நடித்த சாய் பல்லவி, மலையாளத்தில் பிஸியான நடிகையாக உள்ளார். மலையாளத்தில் தமிழ் பெண்ணாக நடித்து ரசிகர்களின் மனங்களை கவர்ந்த சாய் பல்லவி, இயக்குநர் ஏ.எல்.விஜய் இயக்கத்தில் தமிழ் திரைப்படம் ஒன்றில் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் சாய் பல்லவிக்கு போட்டியாக அவரது தங்கை பூஜா கண்ணன் கோலிவுட்டில் களமிறங்க உள்ளார். இதற்கு முன்னோட்டமாக பூஜா கண்ணன் நாயகியாக நடித்த காரா என்ற குறும்படம் இன்று யுடியுப்பில் வெளியிடப்பட்டது. கோவை காந்திபார்க் பகுதியில் உள்ள ஒரு திரையரங்கில் திரையிடப்பட்ட இந்த குறும்படத்தை பொதுமக்கள், கல்லூரி மாணவர்கள் உள்ளிட்டோர் பார்த்தனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பூஜா கண்ணன்,

கோவையில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் இளங்கலை ஆங்கிலம் படித்து வருவதாக தெரிவித்தார். அக்கா சாய் பல்லவி சினிமா துறையில் இருப்பதால் தனக்கும் பட வாய்ப்புகள் வருவதாகவும், படிப்பு முடிந்த உடன் திரைப்படங்களில் நடிக்க திட்டமிட்டுள்ளதாகவும் கூறிய பூஜா கண்ணன், நல்ல கதையுடன் கூடிய பட வாய்ப்புகள் வந்தால் தற்போதே படங்களில் நடிக்க ரெடியாக இருப்பதாக தெரிவித்தார். கோவையை சேர்ந்த இளைஞர்கள் உருவாக்கியுள்ள இந்த காரா குறும்படத்தை, ஆஜித் என்ற இளைஞர் இயக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க