• Download mobile app
30 Mar 2026, MondayEdition - 3701
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

ரூ.500 ,100,50,20 நோட்டுகள் அச்சடிக்கும் பணி தீவிரம்

December 24, 2016 தண்டோரா குழு

ரூ.500 ,100,50,20 நோட்டுகள் அச்சடிக்கும் பணி நாசிக்கில் உள்ள ரூபாய் நோட்டுகள் அச்சடிக்கும் மையத்தில், மூன்று மடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளது எனத் தகவல் வெளியாகியுள்ளது.

பழைய ரூபாய் 500, 1000 வாபஸ் பெறப்பட்டதைத் தொடர்ந்து, பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்குஆளாகி வருகின்றனர். ஏ.டி.எம். இயந்திரங்களில் புதிய ரூ 2000 தான் அதிக அளவில் வருகிறது. இதனால், சில்லறைத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளன என வியாபாரிகள் தெரிவிக்கின்றனர். இதனைப் போக்க மத்திய அரசாங்கம் தற்பொது புதிய ரூ 500 அச்சடிக்கும் பணியைத் தீவிரப்படுத்தியுள்ளது.

இது தொடர்பாக நாசிக்கில் உள்ள ரூபாய் நோட்டு அச்சடிக்கும் மைய அதிகாரி ஒருவர் சனிக்கிழமை கூறுகையில், “ரூபாய் நோட்டு வாபஸ் திட்டம் அறிவிக்கப்பட்ட பிறகு, நவம்பர் 10ம் தேதி முதல் தினமும் 35 லட்சம் எண்ணிக்கையில் ரூ.500 நோட்டுகள் அச்சடிக்கும் பணி நடந்து வந்தது.

தற்போது, இங்கு தினமும், 1 கோடியே 90 லட்சம் எண்ணிக்கை அளவுக்கு பல மதிப்புகள் ரூபாய் நோட்டுகள் அச்சடிக்கப்பட்டு வருகின்றன. இதில் ரூ.500 நோட்டுகள் மட்டும் தினமும் ஒரு கோடி நோட்டுகள் அச்சடிக்கப்படுகின்றன. மற்றவை ரூ.100, ரூ.50, ரூ.20 நோட்டுகள் அச்சடிக்கப்படுகின்றன. ரூ.2000 நோட்டுகள் அச்சடிக்கப்படவில்லை” என்றார்.

மேலும் படிக்க