• Download mobile app
17 May 2024, FridayEdition - 3019
FLASH NEWS
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

விமானத்தில் ட்ரம்ப் மகளுடன் தகராறு: பயணி வெளியேற்றம்

December 23, 2016 தண்டோரா குழு

அமெரிக்க அதிபர் பதவிக்குத் தேர்வாகியுள்ள டொனால்ட் டிரம்ப்பின் மகளுடன் விமானத்தில் தகராறு செய்த பயணி ஒருவர் வெளியேற்றபட்டுள்ளார்.

சமீபத்தில் நடந்து முடிந்த அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றிபெற்ற டொனால்ட் டிரம்ப் அடுத்த மாதம் பதவி ஏற்கவிருக்கிறார். அவரது மகள் இவன்கா மேரி டிரம்ப் (35), அவருடைய கணவர் மற்றும் குழந்தையுடன் விடுமுறைக்காக ஹவாய் பயணமாக இருந்தார். அதன்படி, அமெரிக்காவின் ஜான் எஃப் கென்னெடி விமான நிலையத்தில் இருந்து ஹவாய் செல்லும் விமானத்தில் ஏறி, இருக்கையில் அமர்ந்திருந்தனர்.

அங்கு வந்த ஒருவர் அவரைக் கண்டதும் கோபம் கொண்டு, “உன்னுடைய தந்தை நாட்டை பாழாக்கிவருகிறார். உங்களை யார் இந்த விமானத்தில் வருமாறு அழைத்தது? நீங்கள் தனி விமானத்தில் பயணிக்கலாமே…” என்று கூறியுள்ளார். இதனையடுத்து, அவர் விமானத்திலிருந்து வெளியேற்றப்பட்டார்.

வெளியேற்றப்பட பயணி அமெரிக்காவின் புருக்லின் நகரில் வக்கீலாக பணி செய்துவருபவர் என்று தெரிய வந்ததுள்ளது. இச்சம்பவம் குறித்து வெளியேற்றப்பட பயணியின் மனைவி ட்விட்டரில் வெளியிட்ட பதிவில், “எனது கணவர் தனது அதிருப்தியை வெளிப்படுத்தியதற்காக விமானத்தில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளார்” என்று கூறியுள்ளார்.

மேலும் படிக்க