• Download mobile app
16 Jul 2026, ThursdayEdition - 3809
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

விமானத்தில் ட்ரம்ப் மகளுடன் தகராறு: பயணி வெளியேற்றம்

December 23, 2016 தண்டோரா குழு

அமெரிக்க அதிபர் பதவிக்குத் தேர்வாகியுள்ள டொனால்ட் டிரம்ப்பின் மகளுடன் விமானத்தில் தகராறு செய்த பயணி ஒருவர் வெளியேற்றபட்டுள்ளார்.

சமீபத்தில் நடந்து முடிந்த அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றிபெற்ற டொனால்ட் டிரம்ப் அடுத்த மாதம் பதவி ஏற்கவிருக்கிறார். அவரது மகள் இவன்கா மேரி டிரம்ப் (35), அவருடைய கணவர் மற்றும் குழந்தையுடன் விடுமுறைக்காக ஹவாய் பயணமாக இருந்தார். அதன்படி, அமெரிக்காவின் ஜான் எஃப் கென்னெடி விமான நிலையத்தில் இருந்து ஹவாய் செல்லும் விமானத்தில் ஏறி, இருக்கையில் அமர்ந்திருந்தனர்.

அங்கு வந்த ஒருவர் அவரைக் கண்டதும் கோபம் கொண்டு, “உன்னுடைய தந்தை நாட்டை பாழாக்கிவருகிறார். உங்களை யார் இந்த விமானத்தில் வருமாறு அழைத்தது? நீங்கள் தனி விமானத்தில் பயணிக்கலாமே…” என்று கூறியுள்ளார். இதனையடுத்து, அவர் விமானத்திலிருந்து வெளியேற்றப்பட்டார்.

வெளியேற்றப்பட பயணி அமெரிக்காவின் புருக்லின் நகரில் வக்கீலாக பணி செய்துவருபவர் என்று தெரிய வந்ததுள்ளது. இச்சம்பவம் குறித்து வெளியேற்றப்பட பயணியின் மனைவி ட்விட்டரில் வெளியிட்ட பதிவில், “எனது கணவர் தனது அதிருப்தியை வெளிப்படுத்தியதற்காக விமானத்தில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளார்” என்று கூறியுள்ளார்.

மேலும் படிக்க