• Download mobile app
17 Aug 2025, SundayEdition - 3476
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

தேர்தல் நாளன்று தொழிலாளர்களுக்கு சம்பளத்துடன் விடுமுறை அளிக்க உத்தரவு

October 5, 2021 தண்டோரா குழு

கோவை தொழிலாளர் உதவி கமிஷனர் (அமலாக்கம்) வெங்கடேசன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:

தமிழகத்தில் நாளை (புதன்கிழமை) மற்றும் 9 -ந் தேதி (சனிக்கிழமை) அன்று கோவை உள்பட 28 மாவட்டங்களில் உள்ள பல்வேறு இடங்களில் உள்ளாட்சி தேர்தல் நடக்க உள்ளது. இதையொட்டி மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் 1951 பிரிவு 135-பியின் படி தேர்தல் நடைபெறும் நாட்களில், சென்னை தொழிலாளர் ஆணையர் அதுல் ஆனந்த் உத்தரவின்படி, கோவை கூடுதல் தொழிலாளர் கமிஷனர் பொன்னுச்சாமி மற்றும் இணை கமிஷனர் லீலாவதி ஆகியோர் ஆகியோர் அறிவுறுத்தலின் பேரில் உள்ளாட்சி தேர்தல் நடைபெறும் இடங்களில் உள்ள அனைத்து நிறுவனங்களில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு சம்பளத்துடன் விடுமுறை அளிக்க வேண்டும்.

மேலும் தேர்தல் குறித்து தொழிலாளிக்கு விடுப்பு வழங்கப்படுவது தொடர்பாக பெறப்படும் குறைகள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் வணிகர்கள் மற்றும் நிறுவன உரிமையாளர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும் படிக்க