• Download mobile app
11 Feb 2026, WednesdayEdition - 3654
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

குடிநீர் விநியோம் தொடர்பாக மாநகராட்சி கமிஷனர் ஆய்வு

September 15, 2021 தண்டோரா குழு

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலத்திற்குட்பட்ட சின்னவேடம்பட்டி, துடியலூர் பகுதிகளில் மாநகராட்சி கமிஷனர் ராஜ கோபால் சுன்கரா ஆய்வு மேற்கொண்டார்.

கோவை துடியலூர் பகுதியில் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தால் பராமரிக்கப்பட்டு வரும் நீருந்து நிலையத்தில் கோவை மாநகராட்சிக்குட்பட்ட சின்னவேடம்பட்டி, வெள்ளக்கிணறு வார்டு எண் 26, 42, 43 ஆகிய பகுதிகளுக்கு குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது.

இந்த குடிநீர் விநியோம் தொடர்பான குறைபாடுகள், மாநகராட்சிக்கு பெறப்படும் குடிநீர் அளவு குறித்து மாநகராட்சி கமிஷனர் ஆய்வு மேற்கொண்டார். பின்னர் துடியலூரில் அமைந்துள்ள மாநகராட்சி வணிக வளாகத்தில் ஆய்வு மேற்கொண்டார்.மேலும் அருகாமையில் அமைந்துள்ள மாநகராட்சி கழிப்பிடம் தூய்மையாக பராமரிக்கப்படுகிறதா? எனவும் மாநகராட்சி கமிஷனர் ஆய்வு மேற்கொண்டார்.

இந்த ஆய்வின்போது மாநகரப் பொறியாளர் லட்சுமணன், செயற்பொறியாளர் ஞானவேல், உதவி கமிஷனர் அண்ணாதுரை மற்றும் பலர் உடனிருந்தனர்.

மேலும் படிக்க