• Download mobile app
05 Jun 2026, FridayEdition - 3768
FLASH NEWS
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

அனுமதியின்றி மரபணு மாற்றப்பட்ட கடுகு விதை விற்பனை இல்லை

October 25, 2016 தண்டோரா குழு

உச்ச நீதிமன்றத்தின் அனுமதி பெற்ற பிறகே, மரபணு மாற்றப்பட்ட கடுகு விதை விற்பனை செய்யப்படும் என உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.

மரபணு மாற்றப்பட்ட கடுகு விதைகளால் விவசாயத்திற்குப் பாதிப்பு ஏற்படும். எனவே இதனை இந்தியாவில் அனுமதிக்க கூடாது எனக்கோரி இந்தியா முழுவதும் விவசாயிகள் பல கட்ட போராடங்களை நடத்தி வந்தனர்.

இதனிடையே, உரிய பரிசோதனைகள் செய்யாமல், மரபணு மாற்றப்பட்ட கடுகு விதைகள் விற்கப்படுவதையும், விதைக்கப்படுவதையும் தடுத்து நிறுத்தக் கோரி ஒரு விவசாயி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

அதை விசாரித்த தலைமை நீதிபதி, டி.எஸ்.தாக்குர் ஆகியோர் கொண்ட அமர்வு, இந்த விதைகளை விற்பனை செய்வதற்குத் தடை விதித்தது. ஆனாலும், சந்தையில் மரபணு மாற்றப்பட்ட கடுகு விதைகள் மறைமுகமாக விற்கப்படுகின்றன என விவசாயிகள் குற்றம் சாட்டி வந்தனர்.இந்த வழக்கு திங்கள்கிழமை (அக். 24) மீண்டும் விசாரணைக்கு வந்ததது.

மத்திய அரசு சார்பில் ஆஜரான அட்டர்னி ஜெனரல் முகுல் ரோஹத் கூறியதாவது:

“உச்ச நீதிமன்ற அனுமதி பெறாமல், இந்த மரபணு மாற்றப்பட்ட கடுகு விதைகள் விற்கப்படாது. அதே போல் விளைநிலத்திலும் பரிசோதனை செய்யப்படாது என்று உறுதியளிக்கிறோம்” என கூறினார்.

இதனை ஏற்ற நிதிபதி அமர்வு இந்த வழக்கின் விசாரணையை இரண்டு வாரங்களுக்கு ஒத்தி வைத்தது.

மேலும் படிக்க