July 1, 2020
தண்டோரா குழு
கோவையில் நாளுக்கு நாள் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இந்நிலையில் இன்று ஒரே நாளில் 45 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதில் செட்டி வீதி பகுதியில் 3 வயது குழந்தை உட்பட 13 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது. இதேபோல பீளமேடு பாலன் நகர் பகுதியை சேர்ந்த 8 பேர், சூலூர் கலங்கல் பகுதியை சேர்ந்த 4 பேர், சாய்பாபா காலணி சின்னம்மாள் வீதியை சேர்ந்த 3 பேர், உக்கடம் சிஎம்சி காலணியை சேர்ந்த 2 பேர் , கரும்புக்கடையை சேர்ந்த 2 பேருக்கும் தொற்று உறுதியாகியுள்ளது.அதைப்போல்,
செல்வபுரம், ராமநாதபுரம், கோவில்மேடு, கணபதி, சலிவன் வீதி பகுதியில் தலா ஒருவருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது. மேலும், டெல்லியில் இருந்து விமானம் மூலம் வந்த 2 பேருக்கும் சவுதியில் இருந்து வந்த 5 பேருக்கும் தொற்று உறுதியாகியுள்ளது.
அதேசமயம்,கொரோனாவால் கோவை இஎஸ்ஐ மருத்துவமனையில் கொரோனா தொற்று காரணமாக சிகிச்சை பெற்று வந்த வால்பாறை தொகுதி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஆறுமுகம் உள்ளிட்ட 29 பேர் குணமடைந்து வீடு திரும்பினர்.இதன் மூலம் கோவையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 561 ஆக உயர்ந்துள்ளது.இதில் 222 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். 337 பேர் சிகிச்சையில்
உள்ளனர்.