• Download mobile app
22 Jul 2026, WednesdayEdition - 3815
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

சொகுசு விமானத்தை விற்கும் நடவடிக்கையை துரிதப்படுத்த வேண்டும்

October 15, 2016 தண்டோரா குழு

விஜய் மல்லையாவின் தனி விமானத்தை மறு ஏலம் மூலம் விற்கும் நடவடிக்கையை விரைவுபடுத்த வேண்டும் என சேவை வரித் துறைக்கு மும்பை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்திய வங்கிகளிடமிருந்து பல ஆயிரம் கோடி கடன் பெற்றுக்கொண்டு திருப்பிச்செலுத்தாமல் வெளிநாட்டிற்குத் தப்பி சென்று விட்டார் தொழிலதிபர் விஜய் மல்லையா.

அவரைக் கைது செய்யும் முயற்சியில் மத்திய அரசாங்கம் இறங்கியுள்ளது. இந்நிலையில் சேவை வரி பாக்கிக்காக அவரது சொகுசு விமானத்தைச் சேவைவரித் துறை பறிமுதல் செய்து, கடந்த ஜூன் மாதம் ஏலம் விடப்பட்டது.

விமானத்தின் மொத்த மதிப்பில் 80 சதவீதம் வரையே ஏலம் கேட்கப்பட்டது. இதனால், விமானத்தை மறு ஏலம் விடுவதற்கான அனுமதியை, சேவை வரித் துறைக்கு மும்பை உயர் நீதிமன்றம் வழங்கியது.

விமானம் ஏலம் தொடர்பாக கூடுதல் அவகாசம் கேட்டு சேவை வரித்துறை மனு அளித்திருந்தது இது தொடர்பாக நீதிபதிகள் எஸ்.சி. தர்மாதிகாரி, பி.பி கொலாபாவாலா ஆகியோர் முன் வெள்ளிக்கிழமை விசாரணை நடைபெற்றது.

அதில் விமானத்தை மறு ஏலம் விடும் நடவடிக்கையை விரைவுபடுத்தும்படி, சேவை வரித் துறைக்கு நீதிபதிகள் கண்டிப்புடன் உத்தரவிட்டனர். மேலும், வரும் டிசம்பர் 15-ஆம் தேதிக்குள் விமானத்தை விற்பனை செய்ய வேண்டும் என்று தெரிவித்த நீதிபதிகள் அடுத்தகட்ட விசாரணையை டிசம்பர் 20 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

மல்லையாவின் சொகுசு விமானம், 25 பயணிகளும், 6 ஊழியர்களும் அமரும் வகையில் அமைந்தது. மேலும், கருத்தரங்கக் கூடங்கள், சந்திப்பு அறைகள், குளியலறையுடன் கூடிய படுக்கையறை உள்ளிட்ட ஆடம்பர வசதிகள் இந்த விமானத்தில் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க