• Download mobile app
09 May 2026, SaturdayEdition - 3741
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

அரசு மருத்துவமனையில் குழந்தைக்கு தடுப்பூசி போடும் உடைந்த ஊசி – கண்டுகொள்ளாத செவிலியர், மருத்துவர்

September 9, 2019 தண்டோரா குழு

மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனையில் குழந்தைக்கு தடுப்பூசி போடும் உடைந்த ஊசி துண்டையும் கண்டுக்கொள்ளாத செவிலியர், மருத்துவர் மீது நடவடிக்கை எடுக்ககோரி மனு தாய் புகார் அளித்துள்ளார்.

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் எம்.எஸ்.ஆர் புரத்தை சேர்ந்தவர்கள் பிரபாகரன், மலர்விழி தம்பதினர். இவர்களுக்கு திருமணமாகி ஒரு ஆண் குழந்தை உள்ளது. இந்நிலையில், மலர்விழி இரண்டாவது பிரசவத்திற்காக கடந்த ஆகஸ்ட் மாதம் 19ம் தேதி மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனையில் பிரசவ வார்டில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அடுத்த நாள் அவருக்கு அறுவை சிகிச்சை மூலம் அவருக்கு ஆண் குழந்தை பிறந்தது. இதற்கிடையில், 21ம் தேதி மருத்துவமனையில் தடுப்பூசி என்று குழந்தைக்கு இடது கையில் ஓர் ஊசியும், இடது தொடையில் ஓர் ஊசியும் போட்டுள்ளனர்.

இதையடுத்து, மலர்விழி 31ம் தேதி டிஸ்சார்ஜ் வீட்டுக்கு சென்றுள்ளார்.ஆனால்,அன்று இரவு முழுவதும் குழந்தை தொடர்ந்து அழுந்து கொண்டே இருந்துள்ளது. மறுநாள் குழந்தையின் இடது தொடையில் லேசான வீக்கம் ஏற்பட்டுள்ளது. நாளடைவில் வீக்கம் அதிகமாகி கொண்டே வந்துள்ளது. இந்நிலையில், மலர்விழியின் தாய் தேன்மொழி குழந்தையை குளிப்பாட்டியுள்ளார். அப்போது குழந்தையின் இடது தொடையில் ஏதோ குத்தி தேன்மொழிக்கு கையில் ரத்தம் வந்துள்ளது. இதனால் சந்தேகமடைந்த மலர்விழி குழந்தையின் இடது தொடையில் தடுப்பூசி போட்ட இடத்தில் தடவி பார்த்த போது ஊசியின் மேல் நுனி துருத்திக்கொண்டிருந்தது. அதை எடுத்தபோது செவிலியர் ஊசிபோட்டு உடைந்த ஊசி துண்டு வந்துள்ளது. இதை பார்த்து அவர் அதிர்ச்சியடைந்துள்ளார்.

இந்நிலையில்,மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனை தலைமை மருத்துவரிடம் மலர்விழி புகார் அளித்துள்ளார். அதில், தங்கள் அரசு மருத்துவர் மற்றும் செவிலியரின் அலட்சியமான கவனக்குறைவால் இந்த செயல் நடந்துள்ளது. ஆகவே எனது குழந்தைக்கு சரியான குழந்தைக்கு சரியான சிகிச்சை கொடுக்க வேண்டும் என்றும் சம்மந்தப்பட்ட செவிலியர் மற்றும் மருத்துவர் மீது துறை ரீதியிலான நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார்.

மேலும் படிக்க