• Download mobile app
19 Jun 2025, ThursdayEdition - 3417
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

ஆண்டவன் தான் உங்கள காப்பாத்தனும் பிசிசிஐ – விக்னேஷ் சிவன் டுவீட்

October 27, 2018 தண்டோரா குழு

இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வரும் மேற்கிந்திய அணி ஒரு நாள் கிரிக்கெட் போட்டி தொடருக்கு பிறகு மூன்று 20 ஓவர் போட்டிகளில் விளையாட உள்ளது.இதில் பங்கேற்கும் இந்திய அணி நேற்று அறிவிக்கப்பட்டது.அதில்,கேப்டன் விராட் கோலிக்கு ஓய்வு அளிக்கப்பட்டு,ரோஹித் சர்மா கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.ஆனால்,அணியில் தோனிக்கு இடம் அளிக்கப்படவில்லை.

அதைபோல் இந்த தொடருக்கு பின் ஆஸ்திரேலியா சுற்றுப்பயணம் செய்யும் இந்திய அணி முதலில் மூன்று 20 ஓவர் போட்டிகளில் விளையாட உள்ளது.இதில், விராட் கோலி கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.எனினும்,இந்த போட்டிகளில் முன்னாள் கேப்டன் டோனி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.இதனால் தோனி ரசிகர்கள் கடும் கோபத்தில் உள்ளனர்.பிசிசிஐக்கு எதிராக விமர்சனம் செய்து வருகின்றனர்.

இந்நிலையில்,இயக்குநர் விக்னேஷ் சிவன் தனது டுவிட்டர் பக்கத்தில்,

தலைவன் தோனி இல்லாமல் டி20 அணி அறிவிக்கப்பட்டுள்ளதை பார்க்குபோது என் இதயம் நொருங்கிவிட்டது.கேவலமான தேர்வு கமிட்டி.ஆண்டவன் தான் உங்கள காப்பாத்தனும் பிசிசிஐ.தலைவன் இல்லாமல் ஆணிய கூட புடுங்க முடியாது என கோவமாக பதிவிட்டுள்ளார்.

மேலும் படிக்க