• Download mobile app
19 Jun 2025, ThursdayEdition - 3417
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கெட்டவர்களுக்கும்,துரோகிகளுக்கும் உயர்நீதிமன்ற தீர்ப்பு பாடம் புகட்டியுள்ளது – முதல்வர் பழனிசாமி

October 27, 2018 தண்டோரா குழு

கெட்டவர்களுக்கும்,துரோகிகளுக்கும் உயர்நீதிமன்ற தீர்ப்பு பாடம் புகட்டியுள்ளது என முதல்வர் பழனிச்சாமி கூறியுள்ளார்.

இதுகுறித்து கோவையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த முதல்வர் பழனிச்சாமி,

“20 தொகுதிக்கும் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டால்,தேர்தலை சந்திக்க அதிமுக தயாராக உள்ளது.துரோகம் இழைத்தவர்களுக்கு 18 எம்எல்ஏக்கள் தீர்ப்பு மூலம் சரியான பாடம் கிடைத்துள்ளது.கெட்டவர்களுக்கும்,துரோகிகளுக்கும் உயர்நீதிமன்ற தீர்ப்பு பாடம் புகட்டியுள்ளது.முல்லைப்பெரியாரில் அணைக்கட்ட கேரள அரசுக்கு,மத்திய அரசு அனுமதி அளிக்க கூடாது என பிரதமருக்கு கடிதம் எழுதி உள்ளேன்.புதிய அணை கட்ட தமிழக அரசு தயாராக உள்ளது,மற்ற மாநிலங்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.

ஆனைமலையாறு,இடைமலையாறு திட்டங்களை செயல்படுத்த கேரள அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது.மீனவர்களின் நலன் காக்கிற அரசு அதிமுக அரசு.மீனவர்களின் துன்பங்களை நிவர்த்தி செய்ய மாநில அரசு நடவடிக்கை எடுக்கும் மீனவர்கள் தாக்கப்படக்கூடாது என்பது தான் தமிழக அரசின் நிலைப்பாடு. இலங்கை சிறையில் உள்ள மீனவர்களை விடுதலை செய்ய நடவடிக்கை எடுத்து வருகிறோம்.அத்திக்கடவு அவினாசி திட்டம் விரைவில் நிறைவேற்றப்படும். பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் விவகாரத்தில் தமிழக அரசு என்ன செய்ய முடியுமோ அதை செய்துவிட்டது,இனி ஆளுநர் தான் முடிவு செய்ய வேண்டும்”.இவ்வாறு பேசினார்.

மேலும் படிக்க