• Download mobile app
19 Jun 2025, ThursdayEdition - 3417
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்திரராஜனுக்கு ‘இந்தியஅரசியலில் வளர்ந்து வரும் நட்சத்திரம்’ விருது

October 27, 2018 தண்டோரா குழு

தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்திரராஜனுக்கு ‘இந்திய அரசியலில் வளர்ந்து வரும் நட்சத்திரம்’ என்ற விருது வழங்கப்படவுள்ளது.கடந்த 2014ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் தமிழக பாஜக கட்சியில் தலைவராக தமிழிசை சவுந்திரராஜன் பொறுப்பேற்றார்.மருத்துவத் துறையைச் சார்ந்த இவர்,தமிழகப் பாஜகவின் முதல் பெண் தலைவராவார்.

தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் குமரி ஆனந்தனின் மகளான இவர்,பாரதிய ஜனதா கட்சியில் மாநில பொதுச்செயலாளர்,துணைத்தலைவர், தேசிய செயலாளர் உள்ளிட்ட பொறுப்புகளை வகித்துள்ளார்.தமிழக பாஜகவின் முக்கிய முகமாக அவர் தற்போது இருந்து வருகிறார்.

இந்நிலையில்,அரசியல்,மருத்துவ,சமூக சேவைகளில் சர்வதேச அளவில் சிறந்த செயல்பாடுடைய பெண்தலைவர் என்று சிக்காகோ நகரில் செனட்டர் டேவிஸ் தலைமையில் நடைபெறும் 8வது ஆண்டு பன்னாட்டு கலாச்சார ஒருங்கிணைப்பு சான்றோர் மையம் சார்பில் பாஜக மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜனுக்கு ‘இந்திய அரசியலில் வளர்ந்து வரும் நட்சத்திரம்’ என்ற விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க