October 26, 2018
தண்டோரா குழு
கொடிசியா என்று அழைக்கப்படும் கோவை மாவட்ட சிறு தொழில்கள் சங்கம் இந்த ஆண்டு பொன்விழா ஆண்டில் அடியெடுத்து வைப்பதால்,இதற்கான ஆண்டு விழா கொண்டாட்டங்கள் நடைபெறவுள்ளது.இதுகுறித்து கொடிசியா தலைவர் ராமமூர்த்தி மற்றும் அதன் நிர்வாகிகள் செய்தியாளர்களை சந்தித்து பேசினர்.
அவர்கள் பேசியபோது, பொன்விழா ஆண்டு கொண்டாட்டங்கள் வருகிற 29 ஆம் தேதி நடைபெற உள்ளது.இதில் தமிழக ஆளுனர் பன்வாரிலால் புரோஹித் மற்றும் அமைச்சர் எஸ்.பி வேலுமணி ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்துக் கொள்ள உள்ளனர்.
இந்தியாவில் உள்ள சிறு குறு நடுத்தர தொளில்களுக்கான் மிகப்பெரிய சங்கமாக கொடிசியா இயங்கி வருகிறது.தொழில்,பொருளாதார வளர்ச்சி,மற்றும் வளமான எதிர் காலத்துக்காக கொடிசியா சுயலாப நோக்கமின்றி செயல்படுகிறது.இந்த பொன்விழா ஆண்டு விழா கொண்டாடட்டத்தில் அனைவரும் கலந்து கொண்டு சிறப்பிக்குமாறு கேட்டுக் கொண்டனர்.