• Download mobile app
02 Aug 2026, SundayEdition - 3826
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

யூ கோ கவர்னர் … ப்ளீஸ் கோ மேடையிலேயே ஆளுநர் கிரண்பேடி அதிமுக எம்எல்ஏ வாக்குவாதம்

October 2, 2018 தண்டோரா குழு

புதுச்சேரியில் அரசை குற்றம்சாட்டி அதிமுக எம்.எல்.ஏ.அன்பழகன் பேசிய போது மைக்கை ஆஃப் செய்ததால் கோபமடைந்து ஆளுநருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

புதுச்சேரியில் நாராயணசாமி தலைமையில் காங்கிரஸ் கட்சி ஆட்சி செய்து வருகிறது.ஆளுநராக கிரண்பேடி இருந்து வருகிறார்.இந்நிலையில்,உள்ளாட்சித் துறை சார்பில் கம்பன் கலையரங்கில் இன்று விழா நடைபெற்றது.இவ்விழாவில் துணை நிலை ஆளுநர் கிரண்பேடி,அமைச்சர்கள்,எம்எல்ஏக்கள் உள்ளிட்ட பலர் கலந்துக் கொண்டனர்.

இவ்விழாவில் அதிமுக எம்எல்ஏ அன்பழகன் பேசும் போது,அரசின் திட்டங்கள் முறையாக நிறைவேற்றப்படவில்லை. திறந்தவெளி கழிவறை இல்லாத மாநிலமாக புதுச்சேரியை அறிவிக்க ஆளுநர் யார்?எனது தொகுதியில் ஏராளமான வீடுகளில் கழிவறையே இல்லை என விமர்சித்து பேசினார்.

அப்போது ஆளுநர் கிரண்பேடி அன்பழகனின் பேச்சை நிறுத்துமாறு கூறினார்.எனினும் அவர் தொடர்ந்து பேசி கொண்டே இருந்ததால் மைக்கை ஆப் செய்யுமாறு கிரண்பேடி உத்தரவிட்டதை தொடர்ந்து மைக் ஆப் செய்யப்பட்டது.

இதனால் கோபமடைந்த அன்பழகன் பொது மேடையில் ஆளுநர் கிரண்பேடியுடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதையடுத்து கிரண்பேடி கைகூப்பி யூ கோ என்று எம்.எல்.ஏவிடம் கூற அதற்கு அவரோ தனது கைகளை கூப்பி யூ கோ என்று கூறினால் நீங்கள் போய்விடுவீர்களா என கேட்டார்.

ஒரு கட்டத்தில் ஒருமையிலும் அவரை அன்பழகன் பேசினார்.இதனால் மேடையில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. நேரத்தை விரயமாக்கும் விதமாக எம்.எல்.ஏ அன்பழகன் பேசிக் கொண்டிருந்ததால் மைக்கை ஆப் செய்யக் கூறிதாக கிரண்பேடி கூறினார்.

மேலும் படிக்க