• Download mobile app
18 Jun 2026, ThursdayEdition - 3781
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

தண்ணீர் தொட்டியை சுத்தம் செய்தபோது மின்சாரம் தாக்கி வாலிபர் பலி

September 28, 2018 தண்டோரா குழு

கோவையில் தனியார் மருத்துவமனையில் தண்ணீர் தொட்டி சுத்தம் செய்த போது மின்சாரம் தாக்கி உயிரிழந்த துப்புரவு பணியாளரின் உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

கோவை உக்கடம் சிஎம்சி காலணி பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன்.இவர் முஸ்பூர் ரகுமான் என்பவர் நடத்தி வரும் மாஸ் ஹவுஸ் கீப்பிங் என்ற நிறுவனத்தில் துப்புரவு பணியாளராக பணியாற்றி வந்தார்.இந்நிலையில் நேற்று கோவில்பாளையம் பகுதியில் உள்ள ராஜா மருத்துவமனைக்கு வேலைக்கு மணிகண்டனை முஸ்பூர் ரகுமான் அனுப்பியுள்ளார்.

அங்கு தண்ணீர் தொட்டியில் இறங்கி மணிகண்டன் சுத்தம் செய்த போது,மின்சாரம் தாக்கி உயிரிழந்தார்.இதையடுத்து மணிகண்டனின் உடல் உடல்கூராய்விற்காக கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டது.

மருத்துவமனையின் அஜாக்கிரதை காரணமாகவும்,உரிய பாதுகாப்பு உபகரணங்களை முஸ்பூர் ரகுமான் வழங்காததுமே உயிரிழப்பிற்கு காரணமென உறவினர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

மேலும்,மருத்துவமனை மீதும்,முஸ்பூர் ரகுமான் மீதும் நடவடிக்கை எடுக்க கோரியும்,மணிகண்டன் குடும்பத்திற்கு இழப்பீடு வழங்க கோரியும் உறவினர்கள் உடலை வாங்க மறுத்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.இச்சம்பவம் குறித்து கோவில்பாளையம் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் படிக்க